2 3 scaled
இலங்கைசெய்திகள்

கோட்டாபய ராஜபக்சவினால் பெரும் ஏமாற்றத்தில் பலர்

Share

கோட்டாபய ராஜபக்சவினால் பெரும் ஏமாற்றத்தில் பலர்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் எழுதப்பட்டு நேற்று (07) வெளியிடப்பட்ட புத்தகம் சில மணித்தியாலங்களில் விற்று தீர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தன்னை ஜனாதிபதி பதவியில் இருந்து வெளியேற்றும் சதித்திட்டம் குறித்து முன்னாள் ஜனாதிபதி எழுதிய நூல் நேற்று காலை 09 மணியளவில் சந்தையில் வெளியிடப்பட்டு மதியம் 01 மணியளவில் அனைத்து பிரதிகளும் விற்றுத் தீர்ந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதன் காரணமாக, புத்தகத்தை வாங்கும் நம்பிக்கையில் இருந்த ஏராளமானோர் ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நாடளாவிய ரீதியில் உள்ள விஜித யாப்பா புத்தகக்கடைகளின் மூலம் இந்நூல் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

தற்போது, ​​அதன் இரண்டாம் பதிப்பு சந்தையில் வெளியாகும் நிலையில், மூன்றாம் பதிப்பின் பணிகளும் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...