25 scaled
இலங்கைசெய்திகள்

ரணிலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Share

ரணிலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

இலங்கையின் அரசியலமைப்பை மீறும் வகையில் அதிபர் ரணில் விக்ரமசிங்க செயல்பட்டால் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சுதந்திர மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டலஸ் அழகப்பெரும எச்சரித்துள்ளார்.

இந்த ஆண்டு இலங்கையில் அனைத்து தேர்தல்களும் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே, அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

இலங்கையின் வரலாற்றில் நடைபெறவிருந்த பல தேர்தல்களை ஒத்திவைக்க ரணில் விக்ரமசிங்க கடந்த காலங்களில் நடவடிக்கை எடுத்திருந்தார்.

இதற்கமைய, இலங்கையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தல் உள்ளிட்ட ஏனைய தேர்தல்களை ஒத்திவைக்க ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுப்பார் என பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், தேர்தல்களை ஒத்திவைக்க ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்தால் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பமென டலஸ் அழகப்பெரும கூறியுள்ளார்.

இலங்கையின் அரசியலமைப்பு ஒருபோதும் மீறப்படக்கூடாதென அவர் வலியுறுத்தியுள்ளார்.

அரசியலமைப்பை மீறும் வகையில் சிறிலங்காவின் அதிபர் உள்ளிட்ட யார் செயல்பட்டாலும், குறித்த தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென டலஸ் அழகப்பெரும எச்சரித்துள்ளார்.

Share
தொடர்புடையது
images 9 2
செய்திகள்இலங்கை

அஸ்வெசும திட்டம்: தரவு கட்டமைப்பில் மாற்றம் செய்ய நாடாளுமன்றக் குழு பரிந்துரை! 

அஸ்வெசும நலன்புரிச் சலுகைத் திட்டத்தை முறையாகச் செயற்படுத்துவதை உறுதி செய்யும் வகையில், அதன் தரவு கட்டமைப்பிலும்...

images 8 3
செய்திகள்இலங்கை

இலங்கையின் வாகனப் பதிவு அறிக்கையின் முக்கிய அம்சங்கள்: சொகுசு வாகன இறக்குமதி உயர்வு.

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனப் பதிவுத் தரவுகள் அடங்கிய அண்மைய அறிக்கையின்படி, நாட்டில் சொகுசு வாகன...

1707240129 National Peoples Power l
இலங்கைஅரசியல்செய்திகள்

சீதாவக்க பிரதேச சபையைக் கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி: தவிசாளராக பி.கே. பிரேமரத்ன தெரிவு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவடைந்து சுமார் ஆறு மாதங்களுக்குப் பிறகு, இன்று (நவம்பர் 18) நடைபெற்ற...

1 The Rise in Cybercrimes
செய்திகள்இலங்கை

இலங்கையில் அதிகமான இணையக் குற்றச் சம்பவங்கள் பதிவு – சிறுவர்கள் தொடர்புடைய 35 வழக்குகள்!

இலங்கையில் கடந்த 11 மாதங்களில் 6,700இற்கும் அதிகமான இணையக் குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி...