tamilni 558 scaled
இலங்கைசெய்திகள்

கண்டியில் உலக சாதனை: ஆபத்து குறித்து அதிர்ச்சி தகவல்

Share

கண்டியில் உலக சாதனை: ஆபத்து குறித்து அதிர்ச்சி தகவல்

கண்டியில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட வயிற்றில் படிந்திருந்த 13.5 லீட்டர் கொழுப்பை அகற்றும் சத்திரசிகிச்சையானது உயிருக்கு ஆபத்தான சத்திரசிகிச்சை என பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை வைத்திய நிபுணர்களின் சங்கத்தின் வைத்திய நிபுணர் கலாநிதி அமில ஷசங்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தகுதியற்ற மருத்துவர்களால் மேற்கொள்ளப்படும் பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை ஆபத்துகள் குறித்து மக்களுக்கு தெளிவுப்படுத்துவதற்காக நேற்றைய தினம் (25.02.2024) ஊடகவியலாளர் சந்திப்பொன்று நடத்தப்பட்டுள்ளது.

குறித்த ஊடக சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே ஆபத்துகள் தொடர்பில் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்போது மேலும் விளக்கமளிக்கையில், பயிற்சி பெற்ற மருத்துவரின் தலையீடு இல்லாமல் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்வது உயிருக்கு கூட ஆபத்தாகிவிடும். தகுதிகள் அற்ற பல வைத்தியர்கள் இத்துறையில் பணியாற்றி வருகின்றனர்.

கண்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உலக சாதனை நிகழ்த்தப்பட்டதாக செய்தி ஒன்று வந்தது. அந்தச் செய்தியில் குறிப்பிட்ட அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர் 62 வயது மூதாட்டியின் வயிற்றில் இருந்த 13.5 லீட்டர் கொழுப்பை அகற்றியிருந்தார்.

இந்த மாதிரி அறுவை சிகிச்சையில் 8 லீட்டருக்கு மேல் அகற்றப்பட மாட்டாது. காரணம் அது உயிருக்கு ஆபத்தானது. அது இவ்வாறு குறைக்கப்படும் அறுவை சிகிச்சை அல்ல. அது உடல் வடிவத்தை மீண்டும் பெறும் சிகிச்சையாகும்.

குறித்த அறுவைசிகிச்சைக்குப் பிறகு அந்த நோயாளியின் நிலைமை மிகவும் மோசமாகி மீண்டும் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
25 692fae9358269 1
செய்திகள்இலங்கை

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை: அமைச்சர் வசந்த சமரசிங்க உறுதி!

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. பேரிடர் சூழ்நிலை காரணமாக...

image aef113ab57 1
செய்திகள்இலங்கை

ஹட்டன் – கொழும்பு வீதி மீண்டும் திறப்பு: பஸ் சேவைகள் ஆரம்பம்!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்டிருந்த ஹட்டன்...

1740048123351
செய்திகள்இலங்கை

அனர்த்தத்தின் பெயரால் நிதி மோசடி: நுவரெலியாவில் பணம் வசூலிக்கும் மோசடிக்காரர்கள் குறித்து அவதானம் தேவை!

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உட்பட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சில நபர்கள்...

000 86jq4zl
செய்திகள்இலங்கை

இலங்கையில் புதிய சூறாவளி வதந்தி பொய்: டிச. 4-5இல் லேசான மழைக்கே வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கையில் வரும் நாட்களில் புதிய சூறாவளி ஏற்பட வாய்ப்புள்ளதாகப் பரவி வரும் வதந்திகள் தவறானவை என்று...