tamilni 551 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையில் வெளிநாட்டவர்கள் : நாட்டை விட்டு வெளியேறும் இலங்கையர்கள்

Share

இலங்கையில் வெளிநாட்டவர்கள் : நாட்டை விட்டு வெளியேறும் இலங்கையர்கள்

நாட்டை விட்டு அதிக அளவிலான ஹோட்டல் ஊழியர்கள் வெளியேறுவதால் கொழும்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நட்சத்திர வகுப்பு ஹோட்டல்களை முன்னெடுப்பதில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக ஹோட்டல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த விடயம் தொடர்பில் இலங்கை முதலீட்டுச் சபை ஏற்கனவே ஹோட்டல் நிர்வாகம் தெரியப்படுத்தியுள்ளது.

கடந்த காலங்களில் ஹோட்டல் தொழிலில் ஈடுபட்ட 2000க்கும் அதிகமானோர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நிர்வாகம் முதல் சமையல் அறைகள் வரை அனைத்து துறைகளிலும் பணி வெற்றிடங்கள் பெருமளவில் அதிகரித்துள்ளதால் இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளன.

நட்சத்திர ஹோட்டல்களில் பயிற்சி பெற்ற பலர் வெளிநாடு ஹோட்டல்களில் வேலைக்குச் செல்வதாலும், ஹோட்டல் பாடசாலை பயிற்சி பெற்ற பலர் வெளிநாட்டு ஹோட்டல்களில் வேலை தேடுவதாலும் இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

ஊழியர்கள் பற்றாக்குறையால் சுற்றுலாப் பயணிகளுக்கு முறையான உணவு மற்றும் குளிர்பான சேவைகளை வழங்குவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக ஹோட்டல் நிர்வாகிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் இந்த நேரத்தில், நட்சத்திர வகுப்பு ஹோட்டல்களின் வசதிகள் குறித்து அரசாங்கம் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று ஹோட்டல் துறையில் உள்ள பிரதிநிதிகள் குழு சுட்டிக்காட்டுகிறது.

Share

Recent Posts

தொடர்புடையது
aswesuma
செய்திகள்இலங்கை

அஸ்வெசும திட்டத்தில் பயன்பெறுவோர் கவனத்திற்கு: வருடாந்த தகவல் புதுப்பிப்பு ஆரம்பம்; டிசம்பர் 10 கடைசித் தேதி!

அஸ்வெசும வருடாந்த தகவல் புதுப்பிப்பு தற்சமயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 2023ஆம் ஆண்டில் அஸ்வெசுமவில் முதன் முறையாகப் பதிவுசெய்து...

anura sri lanka president
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனாதிபதியுடன் தமிழ், முஸ்லிம் கட்சித் தலைவர்கள் சந்திப்பு: ‘இனவாத வலைக்குள் நாடு சிக்காது’ – அநுரகுமார திசாநாயக்க உறுதி!

அனைத்து மத மற்றும் கலாசார அடையாளங்களையும் மதித்து, இந்த நாட்டின் ஒவ்வொரு பிரஜைக்கும் சுதந்திரமாக வாழ...

25 6921dea82dcb6
உலகம்செய்திகள்

வரி விதிப்பு வழக்கு: டொனால்ட் ட்ரம்ப் கடும் நெருக்கடியில் – உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்நோக்கி அவசர நடவடிக்கை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம், சர்வதேச வர்த்தக வரி விதிப்பு தொடர்பான ஒரு முக்கிய...

images 4
செய்திகள்அரசியல்இலங்கை

ஊடகப்படுகொலைகள், அடக்குமுறைகளுக்கு நீதி வேண்டும்” – பாராளுமன்றத்தில் துரைராசா ரவிகரன் வலியுறுத்தல்!

கடந்த போர்க்காலத்தில் இடம்பெற்ற ஊடகப்படுகொலைகள் உள்ளிட்ட ஊடக அடக்குமுறைகளுக்கு இந்த அரசாங்கம் நீதியைப் பெற்றுக் கொடுக்க...