tamilni 540 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு நடுத்தர தாங்குதிறன் கண்காணிப்பு கப்பலை வழங்கவுள்ள அமெரிக்கா

Share

இலங்கைக்கு நடுத்தர தாங்குதிறன் கண்காணிப்பு கப்பலை வழங்கவுள்ள அமெரிக்கா

இலங்கைக்கு “நான்காவது நடுத்தர தாங்குதிறன் கண்காணிப்பு கப்பலை அமெரிக்கா வழங்கவுள்ளதாக முகாமைத்துவ மற்றும் வளங்களுக்கான அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் இராஜாங்க செயலாளர் ரிச்சட் வெர்மா தெரிவித்துள்ளார்.

விஜயபாகு என்ற பெயரைக்கொண்ட மூன்றாவது கண்காணிப்பு கப்பலை இலங்கையின் உரிமைக்கு மாற்றும் நிகழ்வின்போது கொழும்பு துறைமுகத்தில் வைத்து அவர் இதனை அறிவித்துள்ளார்.

இந்தநிலையில் நான்காவது கப்பலுக்கான முயற்சிக்கு 9 மில்லியன் நிதியுதவியை அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வழங்கியுள்ளதாக அமெரிக்க கடலோர காவல் படையின் துணை செயலாளர் வர்மா கூறியுள்ளார்.

மேலும், இந்த கப்பல் இலங்கைக்கு வழங்கப்பட்டவுடன், அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும்.

அத்துடன் இந்தக் கப்பல் இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்தில் கண்காணிப்பில் ஈடுபட வழியேற்படும் அதேநேரம், இந்தியப் பெருங்கடலின் பரபரப்பான கடல் பாதைகளை கடக்கும் அனைத்து நாடுகளின் கப்பல்களுக்கும் கூடுதல் பாதுகாப்பை வழங்கும் என்றும் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் இராஜாங்க செயலாளர் ரிச்சட் வெர்மா தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
09 A corruption
செய்திகள்இலங்கை

பிடியாணை, போதை வாகனம் உட்பட ஒரே நாளில் 5000க்கும் அதிகமானோர் கைது!

காவல்துறையினர் மேற்கொண்ட தொடர்ச்சியான நடவடிக்கைகளின் விளைவாக, பிடியாணை மற்றும் பல்வேறு போக்குவரத்து குற்றங்களுக்காக ஒரே நாளில்...

images 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அம்பாறையில் அதிர்ச்சிச் சம்பவம்:  மகளைத் தொடர்ச்சியாகப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது!

அம்பாறை மாவட்டம், பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில்...

1795415 01
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவனில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் பகுதியில் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் சுன்னாகம் பொலிஸாரால் நேற்று சனிக்கிழமை...

aJqHp SD
செய்திகள்உலகம்

இந்தோனேசியா மத்திய ஜாவாவில் பாரிய மண்சரிவு: கடும் மழைவீழ்ச்சியால் 11 பேர் உயிரிழப்பு, 12 பேரைக் காணவில்லை!

இந்தோனேசியாவின் மத்திய ஜாவா மாகாணத்தில் பெய்த கடும் மழைவீழ்ச்சியால் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கி 11...