tamilni 503 scaled
இலங்கைசெய்திகள்

ராஜபக்ச குடும்ப ஊழல்களை விமர்சித்து அமைச்சுப் பதவியை இழந்தேன்

Share

ராஜபக்ச குடும்ப ஊழல்களை விமர்சித்து அமைச்சுப் பதவியை இழந்தேன்

ராஜபக்ச ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட ஊழல்களை விமர்சித்த காரணத்தினாலேயே தான் மின்சக்தி அமைச்சுப் பதவியில் இருந்த விலக்கப்பட்டதாக சம்பிக ரணவக்க எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார்.

ஐக்கிய குடியரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சம்பிக ரணவக தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது, 2010 ஆம் ஆண்டு ஆரம்பமான ராஜபக்ச ஆட்சியின் இரண்டாம் தவணையின் பின்னர் நாட்டின் வருமானம் ஈட்டும் வழிகள் வீழ்ச்சியடைந்தது.

அதற்குப் பதிலாக ஊழல் மற்றும் மோசடிகள் அதிகரித்தது. அதனை வெளிக் கொண்டுவரும் நோக்கில் , பொருளாதார வீழ்ச்சி குறித்து “அல பாலு ஆர்த்திகய” என்ற பெயரில் நூல் ஒன்றை எழுதி வௌியிட்டேன்.

அதன் மூலம் அன்றைய அரசாங்கத்தின் ஊழல் மற்றும் மோசடிகளை அம்பலப்படுத்த முயற்சித்தேன். அதற்கான பரிசாக , 2012வரை எனது வசம் இருந்த மின்சக்தி அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது.

வேறு அமைச்சுப் பொறுப்பில் நியமிக்கப்பட்டேன் மோசடி, ஊழல், முறைகேடுகளுக்கு எதிராக அப்போதைய ராஜபக்ச அரசாங்கம் செயற்படவில்லை. அன்றைக்கு நடைபெற்ற ஊழல் மற்றும் மோசடிகள் காரணமாகவே இந்நாட்டில் இன்று பாரிய பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு அன்றைய ராஜபக்ச ஆட்சியே பிரதான காரணம் என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...