tamilnih 22 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை

Share

இலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளை ஆபத்தான செயற்பாடுகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஹபரணை – தம்புள்ளை பிரதான வீதியில் சுற்றுலா பயணிகளை முச்சக்கர வண்டியில் ஏற்றிச் சென்ற நபர் ஒருவர் வாகனத்தை நிறுத்தி சுற்றுலா பயணி ஒருவரை வைத்து புகைப்படம் எடுப்பதற்காக காட்டு யானைக்கு அருகில் சென்றுள்ளனர்.

இது ஆபத்தான செயற்பாடாகும் எனவும் இவ்வாறான சந்தர்ப்பங்களில் காட்டு யானைகள் வாகனங்களை தாக்கும் சம்பவங்களும் கடந்த காலங்களில் பதிவாகியுள்ளதாகவும் வனவிலங்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வீதியோரங்களில் சுற்றித் திரிந்த காட்டு யானைக்கு அருகில் சில சுற்றுலா பயணிகள் சென்று புகைப்படம் எடுத்தல் மற்றும் உணவுகளை வழங்கும் ஆபத்தான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

வீதியின் அருகே வரும் காட்டு யானைகளுக்கு உணவளிக்கும் பழக்கம் உள்ளதால், அந்த விலங்குகள் தினமும் இந்த வீதியில் சுற்றித்திரிகின்றன.

எனவே சுற்றுலா பயணிகள் மற்றும் பயணிகள் இதுபோன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு வனவிலங்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Share
தொடர்புடையது
images 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காட்டு யானையைச் சித்திரவதை செய்து தீ வைத்த சம்பவம்: சந்தேக நபர்களுக்கு டிசம்பர் 24 வரை விளக்கமறியல்!

சீப்புக்குளம் பகுதியில் காட்டு யானையொன்றைச் சித்திரவதை செய்து, அதன் உடலில் தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய...

1743195570
செய்திகள்உலகம்

சிட்னி துப்பாக்கிச் சூடு: வெறுப்புப் பேச்சைத் தடுக்க அவுஸ்திரேலியாவின் புதிய சட்டங்கள் மற்றும் கடும் எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் யூத சமூகத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து,...

1739447780 5783
இந்தியாசெய்திகள்

இந்திய விமானங்களுக்கான வான்வெளித் தடையை ஜனவரி வரை நீடித்தது பாகிஸ்தான்!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதாக...

25 6939a0f597196 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளியின் தாக்கம்: 200 கடல் மைல் கடற்கரை மாசு – கடற்றொழிலுக்குப் பாரிய அச்சுறுத்தல்!

சமீபத்தில் நிலவிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் இலங்கையின் சுமார் 200 கடல் மைல்...