tamilni 470 scaled
இலங்கைசெய்திகள்

யாழ். வடமராட்சி கடற்பகுதியில் கரை ஒதுங்கிய கூடாரம்

Share

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் இரும்பாலான கூம்பு வடிவிலான கூடாரம் ஒன்று கரையொதுங்கியுள்ளது.

கடற்றொழிலில் ஈடுபடுவதற்காக கடலுக்கு சென்ற தொழிலாளர்கள் இன்று (22.02.2024) காலை இதனை அவதானித்து உடனடியாக வெற்றிலைக்கேணி கடற்படையினருக்கு அறிவித்துள்ளனர்.

குறித்த இரும்பாலான மிதக்கும் கூடாரத்தை கட்டைக்காடு கடற்றொழிலாளர்களின் கரைக்கு கொண்டு வரும் முயற்சி தோல்வியுற்றதால் கூடாரத்தை அகற்றும் நடவடிக்கையில் வெற்றிலைக்கேணி கடற்படையினர் ஈடுபட்டு அதனை அப்புறப்படுத்தியுள்ளதாக தெரியவருகிறது.

இந்நிலையில், அண்மைக்காலமாக வடமராட்சி கிழக்கில் கரையொதுங்கிய இவ்வாறான கூடாரங்களில் தாய்லாந்து கொடி காணப்பட்டதோடு, தற்போது கரையொதுங்கிய இந்த கூடாரத்தில் எந்தவிதமான கொடியும் காணப்படவில்லை என தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 68f495a7c6b1e
செய்திகள்இலங்கை

அரச கிளவுட் செயலிழப்பு: பல அரச இணைய சேவைகள் பாதிப்பு!

இலங்கை அரச கிளவுட் (Lanka Government Cloud – LGC) சேவையில் ஏற்பட்ட தொழில்நுட்பச் செயலிழப்பு...

IMG 20241217 095933 800 x 533 pixel
செய்திகள்இலங்கை

தேசிய மக்கள் சக்தி சார்பில் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை முன்வைப்பதற்கான...

AP20222207925030
செய்திகள்இலங்கை

“மக்களுடனான பிணைப்பே ஆரோக்கியத்தின் ஆதாரம்” – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச

தங்காலை, கால்டன் இல்லத்தில் இருந்தவாறு தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...

BIA 692136
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய வசதி அறிமுகம் – பயணிகளுக்கு கிடைத்துள்ள நன்மை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்காக புதிய வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அதற்கமைய, பிரத்தியேகமாக தானியங்கி...