tamilni 443 scaled
இலங்கைசெய்திகள்

அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள்

Share

அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள்

பரபென் அடங்கிய உணவுகள், மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்களின் பாவனையானது உடலின் ஹார்மோன்களைப் பாதித்து புற்றுநோய், கருப் பிரச்சினைகள், இனப்பெருக்கக் கோளாறுகள் போன்றவற்றை ஏற்படுத்துவதாக சுற்றாடல் நீதி நிலையத்தின் திட்ட முகாமைத்துவ அதிகாரி சலானி ரூபசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில் சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கும் பல்வேறு வகையான சவர்க்காரம், கிருமிநாசினிகள், சலவைத்தூள் , நீரை உட்புகவிடாத துணிகள் போன்றவற்றில் உடலின் ஹார்மோன்களுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது.

சுற்றுச்சூழல் நீதி மையம் மற்றும் சர்வதேச மாசு ஒழிப்பு வலையமைப்பு இணைந்து நடத்திய ஆய்வில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது.

கூடுதலாக, சில ரெயின்கோட்டுகள் மற்றும் ஏப்ரன்களில் மனித ஹார்மோன்களின் செயல்பாட்டை மோசமாக பாதிக்கும் இரசாயனங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த ரசாயனங்களால் சிறுநீரக புற்றுநோய், டெஸ்டிகுலர் புற்றுநோய், தைராய்டு நோய், கர்ப்ப கால உயர் ரத்த அழுத்தம், ரத்தம் மற்றும் தாய்ப்பாலின் மூலம் தாயிடமிருந்து குழந்தைக்கு இந்த ரசாயனங்கள் பரவ வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

பாலிபுளோரோஅல்கைல், மீதில்பரபின், பாபில்பரபின், ஐசோபிரைல்பரபின், பியூட்டில்பரபின், ஐபென்டைல்பரபின் போன்ற பல்வேறு இரசாயனங்கள் இந்த ஆராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ளன.

குறிப்பாக பாலிபுளோரோஅல்கைல் பொருட்கள் நீரில் கரையக்கூடியவை, எனவே அவை தண்ணீரின் மூலம் மனிதர்கள் மற்றும் நீர்வாழ் உயிரினங்களின் உடலுக்குள் நுழைகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

செக் குடியரசில் உள்ள சார்லஸ் பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் ஆய்வுத் துறைக்கு ஃபரிக் துணியால் செய்யப்பட்ட ஏப்ரன்கள், ரெயின்கோட்கள் போன்றவற்றின் ஆறு மாதிரிகளை அனுப்பியதில், ஒரு ஏப்ரனில் ஒரு நனோகிராமிற்கு 2.7 கிராம் என்ற ரசாயனம் பஃப்ளூரோடெகானோயிக் அமிலமும், ஒரு ரெயின்கோட்டில் ஒரு நனோகிராமுக்கு 2.6 கிராம் இரசாயனம் இருப்பதும் தெரிய வந்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்படும் ஆடைகளில் இந்த இரசாயனங்கள் அதிகம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெத்தில்பாரபின், எத்தில்பரபின், புரோபில்பரபின், ஐசோபிரைல்பரபின், ப்யூட்டில்பரபின், பென்டைல்பரபின், ஃபைனில்பாரபின், பென்சில்பரபின், கை சுத்திகரிப்பு, பற்பசை, பாடி வாஷ், மவுத்வாஷ், கிருமிநாசினி டிஷ்யூ பேப்பர் உட்பட 30 மாதிரிகள் அவற்றில் அடங்கியுள்ளன.

சுற்றாடல் நீதி நிலையத்தின் திட்ட முகாமைத்துவ அதிகாரி சலானி ரூபசிங்க கூறுகையில், பரபென் அடங்கிய உணவுகள், மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்களின் பாவனையானது உடலின் ஹார்மோன்களைப் பாதித்து புற்றுநோய், கருப் பிரச்சினைகள், இனப்பெருக்கக் கோளாறுகள் போன்றவற்றை ஏற்படுத்துகிறது என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...