tamilnaadi 115 scaled
இலங்கைசெய்திகள்

கெஹலியவுக்கு தொடர்ந்தும் சிறைச்சாலை வைத்தியசாலையில்

Share

கெஹலியவுக்கு தொடர்ந்தும் சிறைச்சாலை வைத்தியசாலையில்

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு மேலும் மருத்துவ கண்காணிப்பு அவசியம் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

இதன்படி, கெஹெலிய தொடர்ந்தும் சிறைச்சாலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் காமினி. பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற உத்தரவுக்கமைய இது தொடர்பான மருத்துவ அறிக்கைகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மனித இம்யூனோகுளோபுலின் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேரை எதிர்வரும் பெப்ரவரி 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் லோச்சனா அபேவிக்ரம உத்தரவிட்டுள்ளார்.

எனினும் மருத்துவ காரணங்களுக்காக முன்னாள் சுகாதார அமைச்சர் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.

இந்தநிலையில் கெஹெலிய உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் நீதிமன்றில் முன்னிலையாக முடியவில்லை என்று சிறைச்சாலைகள் பேச்சாளர் காமினி.பி. திஸாநாயக்கவும் உறுதிப்படுத்தியுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 47
செய்திகள்இந்தியா

டெல்லி AI உச்சி மாநாடு: கடைசி நேரத்தில் பின்வாங்கிய பில் கேட்ஸ்! – எப்ஸ்டீன் விவகார சர்ச்சை காரணமா?

டெல்லியில் நடைபெற்று வரும் ‘இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில்’ (India AI Impact...

image 1200x800 45
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் அதிரடி! – ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் கைது; எப்ஸ்டீன் விவகாரத்தில் அரசு ரகசியங்களை கசியவிட்டாரா?

பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான தொடர்புகள் மற்றும் பொது அலுவலகத்தில் தவறான நடத்தையில் ஈடுபட்டதாக எழுந்த...

image 1200x800 44
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலைமன்னார் – இராமேஸ்வரம் கப்பல் சேவை மீண்டும்? – 310 மீட்டர் நீளத்தில் புதிய இறங்குதுறை அமைக்கத் திட்டம்!

இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க தலைமன்னார் இறங்குதுறையை (Jetty) நவீனமயமாக்குவதற்கான முதற்கட்ட மேம்பாட்டுத் திட்டம்...