இலங்கைசெய்திகள்

ரணிலுக்காக அடிவாங்கினோம்: ஆனால் அவர் தற்போது திருப்பி அடிக்கிறார்!

Share

ரணிலுக்காக அடிவாங்கினோம்: ஆனால் அவர் தற்போது திருப்பி அடிக்கிறார்!

ஐக்கிய தேசியக் கட்சியில் இருக்கும் போது 25 வருடங்களாக ரணில் விக்ரமசிங்கவுக்காக நாம் அடி வாங்கினோம். ஆனால் இன்று அவர் எம்மை அடிக்கின்றார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரான ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(9) உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஊழல் மோசடிகளை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அதிபர் கூறுகின்றார். ஆனால் என்ன நடக்கின்றது? ஊழல், மோசடிகள் தொடர்பில் கதைப்பவர்களைக் கட்டுப்படுத்துவதற்காக நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

அதேபோல நிகழ்நிலை தொடர்பான போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கைதுசெய்வதற்கு ஏதுவான வகையில் புதிய பயங்கரவாத எதிர்ப்புச்சட்டம் கொண்டுவரப்படவுள்ளது.

பொருளாதாரம் முன்னேறிவருகின்றது ஆனால் மின்கட்டணம் மும்மடங்காக அதிகரித்துள்ளது. இதனால் தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயத்தில் உள்ளன.

மறுபுறத்தில் ஜனநாயக வழியில் இடம்பெறும் போராட்டங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகின்றன. அண்மையில் நடைபெற்ற போராட்டம் மீது கூட தாக்குதல் நடத்தப்பட்டது.

ரணிலுக்காக நாம் 25 வருடங்களாக அடிவாங்கினோம், இன்று அவர் எம்மை திருப்பி அடிக்கின்றார்.” என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
09 A corruption
செய்திகள்இலங்கை

பிடியாணை, போதை வாகனம் உட்பட ஒரே நாளில் 5000க்கும் அதிகமானோர் கைது!

காவல்துறையினர் மேற்கொண்ட தொடர்ச்சியான நடவடிக்கைகளின் விளைவாக, பிடியாணை மற்றும் பல்வேறு போக்குவரத்து குற்றங்களுக்காக ஒரே நாளில்...

images 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அம்பாறையில் அதிர்ச்சிச் சம்பவம்:  மகளைத் தொடர்ச்சியாகப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது!

அம்பாறை மாவட்டம், பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில்...

1795415 01
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவனில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் பகுதியில் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் சுன்னாகம் பொலிஸாரால் நேற்று சனிக்கிழமை...

aJqHp SD
செய்திகள்உலகம்

இந்தோனேசியா மத்திய ஜாவாவில் பாரிய மண்சரிவு: கடும் மழைவீழ்ச்சியால் 11 பேர் உயிரிழப்பு, 12 பேரைக் காணவில்லை!

இந்தோனேசியாவின் மத்திய ஜாவா மாகாணத்தில் பெய்த கடும் மழைவீழ்ச்சியால் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கி 11...