tamilni 202 scaled
இலங்கைசெய்திகள்

மொட்டுக் கட்சியின் அதிபர் வேட்பாளர்! நாடு திரும்பினார் பசில்

Share

மொட்டுக் கட்சியின் அதிபர் வேட்பாளர்! நாடு திரும்பினார் பசில்

அமெரிக்காவில் உள்ள பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச அடுத்த வாரம் மீண்டும் இலங்கைக்கு திரும்பவுள்ளதாக அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர்த் தேர்தலை முன்னிட்டு சில முக்கிய தீர்மானங்களை மேற்கொள்வதற்காக அவர் இலங்கைக்கு திரும்பவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச இலங்கைக்கு திரும்பியதை தொடர்ந்து குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த அதிபர்த் தேர்தலின் போது, இறுதித் தறுவாயில் தனது கட்சி வேட்பாளரை அறிவித்ததாக அவர் நினைவூட்டியுள்ளார்.

அத்துடன், தனது கட்சி கடந்த காலங்களில் பல சிக்கல்களையும் நெருக்கடிகளையும் எதிர்நோக்கியிருந்தாலும், தற்போது நடைபெறவுள்ள அதிபர்த் தேர்தலில் வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கான பலம் இருப்பதாக எஸ்.எம். சந்திரசேன கூறியுள்ளார்.

இலங்கையில் அதிபர்த் தேர்தல் நடைபெற மேலும் சில மாதங்கள் இருந்தாலும், பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் தொடர்பான அறிவிப்பை மேற்கொள்ள கட்சி மேலும் தாமதிக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ். இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் முதியவர் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம், இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் இன்று (மார்ச் 31, 2026) முதியவர் ஒருவரின் சடலம்...

Untitled 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர் ஏண்ட்ரே ருடென்கோ உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வருகை!

ரஷ்ய அரசாங்கத்தின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஏண்ட்ரே ருடென்கோ (Andrey Rudenko), 05 நாட்கள் உத்தியோகபூர்வ...

Untitled 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைச் சுற்றுலாவில் வளர்ச்சி: மார்ச் மாதத்தில் மாத்திரம் 1.7 இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை!

இலங்கையின் சுற்றுலாத்துறை நடப்பு ஆண்டில் பாரிய வளர்ச்சியை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், கடந்த மார்ச்...

Untitled 64
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாநகர சபைகள் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது!

மீதொட்டமுல்ல “பொதுவில் கும்புர” எனும் காணியில் சட்டவிரோதமான முறையில் கழிவுகளைக் கொட்டியதன் மூலம், கொழும்பு மாநகர...