tamilni 156 scaled
இலங்கைசெய்திகள்

ரணில் உரையாற்றுகையில் சபையிலிருந்து வெளியேறிய சஜித்

Share

ரணில் உரையாற்றுகையில் சபையிலிருந்து வெளியேறிய சஜித்

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உரையாற்றிக் கொண்டிருக்கும்போது எதிர்க்கட்சி தலைவர் உட்பட மூவர் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேறியுள்ளனர்.

நேற்றையதினம் (07.02.2024) ஜனாதிபதி ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது அமர்வை ஆரம்பித்து வைத்து அரசாங்கத்தின் விஞ்ஞாபனத்தை சமர்ப்பித்தார்.

இதன்போது ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச, எதிர்க்கட்சி பிரதம அமைப்பாளர் லக்ஸ்மன் கிரியெல்ல மற்றும் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் ஆகியோரே சபையிலிருந்து வெளியேறியுள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்டோர் வெளியேறும் வேளையில் ஜனாதிபதி தனது கொள்கைப் பிரகடனத்தை தொடர்ந்து முன்வைத்துக்கொண்டிருந்ததுடன் பிரதியமைச்சர்கள் ஜனாதிபதியின் அறிக்கையை அவதானித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க, ‘உட்கார்ந்து கேளுங்கள்’ என வெளியேறிய எம்.பி.க்களிடம் உரத்த குரலில் கூறியுள்ளார்.

அப்போது அமைச்சரை அமைதி காக்கும்படி அமைச்சர்கள் எச்சரித்துள்ளனர்.

சுமார் நாற்பத்தைந்து நிமிடங்களுக்கு ஜனாதிபதி தனது கொள்கைப் பிரகடனத்தை சமர்ப்பித்ததன் பின்னர் நாடாளுமன்றம் இன்று காலை 9.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 95
செய்திகள்இலங்கைபிராந்தியம்

75 மி.மீ. கனமழை மற்றும் உச்சத்தில் சூரியன்: இலங்கையின் இன்றைய வானிலை நிலவரம்!

இலங்கையின் பல மாகாணங்களில் இன்று பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை...

world 92
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கடந்த வாரத்தில் மட்டும் 49 பேர் சாலை விபத்துகளில் பலி: போதையில் வாகனம் ஓட்டுவதே முக்கிய காரணம்!

இலங்கையில் கடந்த ஏப்ரல் 4 முதல் ஏப்ரல் 10 வரையிலான ஒரு வார காலப்பகுதியில் மாத்திரம்...

world 94
செய்திகள்உலகம்

இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா – ஈரான் நேரடிப் பேச்சுவார்த்தை: முதல் கட்டம் நிறைவு!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா...

world 93
செய்திகள்உலகம்

சவூதிக்கு போர் விமானங்களை அனுப்பியது பாகிஸ்தான்: எரிசக்தி தளங்களைப் பாதுகாக்க அதிரடி நடவடிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலுக்கு மத்தியில், சவூதி அரேபியாவின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தும்...