tamilni 156 scaled
இலங்கைசெய்திகள்

ரணில் உரையாற்றுகையில் சபையிலிருந்து வெளியேறிய சஜித்

Share

ரணில் உரையாற்றுகையில் சபையிலிருந்து வெளியேறிய சஜித்

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உரையாற்றிக் கொண்டிருக்கும்போது எதிர்க்கட்சி தலைவர் உட்பட மூவர் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேறியுள்ளனர்.

நேற்றையதினம் (07.02.2024) ஜனாதிபதி ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது அமர்வை ஆரம்பித்து வைத்து அரசாங்கத்தின் விஞ்ஞாபனத்தை சமர்ப்பித்தார்.

இதன்போது ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச, எதிர்க்கட்சி பிரதம அமைப்பாளர் லக்ஸ்மன் கிரியெல்ல மற்றும் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் ஆகியோரே சபையிலிருந்து வெளியேறியுள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்டோர் வெளியேறும் வேளையில் ஜனாதிபதி தனது கொள்கைப் பிரகடனத்தை தொடர்ந்து முன்வைத்துக்கொண்டிருந்ததுடன் பிரதியமைச்சர்கள் ஜனாதிபதியின் அறிக்கையை அவதானித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க, ‘உட்கார்ந்து கேளுங்கள்’ என வெளியேறிய எம்.பி.க்களிடம் உரத்த குரலில் கூறியுள்ளார்.

அப்போது அமைச்சரை அமைதி காக்கும்படி அமைச்சர்கள் எச்சரித்துள்ளனர்.

சுமார் நாற்பத்தைந்து நிமிடங்களுக்கு ஜனாதிபதி தனது கொள்கைப் பிரகடனத்தை சமர்ப்பித்ததன் பின்னர் நாடாளுமன்றம் இன்று காலை 9.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
1731919585 Ravi L
செய்திகள்அரசியல்இலங்கை

அரசாங்கம் தேர்தலைக் காலம் தாழ்த்த முடியாது: ஐ.தே.க – ஐ.ம.ச கூட்டணி குறித்து ரவி கருணாநாயக்க முக்கிய தகவல்!

மாகாணசபைத் தேர்தலை இந்த ஆண்டுக்குள் நடத்தத் தவறினால், அது அரசாங்கத்தின் எதிர்காலப் பயணத்திற்குச் சிறந்ததல்ல எனப்...

jaffna ini 900 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ். பல்கலைக்கழகத்தில் அதிர்ச்சி: அனுமதி பெறாமல் 2 மாதங்கள் மருத்துவக் கல்வி பயின்ற மாணவி!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில், பல்கலைக்கழக அனுமதி (Selection) பெறாத யுவதி ஒருவர் கடந்த இரண்டு...

25 68fa79946f647
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

எலிக்காய்ச்சலால் குடும்பஸ்தர் உயிரிழப்பு – இரத்த வாந்தி எடுத்த நிலையில் சிகிச்சை பலனின்றி பலி!

யாழ்ப்பாணத்தில் எலிக்காய்ச்சல் (Leptospirosis) காரணமாக 42 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் இன்று (19) காலை பரிதாபமாக...

55618d90 f52f 11f0 b5f7 49f0357294ff
செய்திகள்உலகம்

ஜப்பானில் திடீர் அரசியல் திருப்பம்: பாராளுமன்றம் கலைப்பு – பிப்ரவரி 8-இல் பொதுத்தேர்தல்!

ஜப்பான் பிரதமர் சனா தகாய்ச்சி (Sanae Takaichi), அந்நாட்டு பாராளுமன்றத்தின் கீழ் சபையை (House of...