tamilni 128 scaled
இலங்கைசெய்திகள்

கொழும்பிற்கு கணவனுடன் சென்ற பெண்ணுக்கு அதிர்ச்சி

Share

கொழும்பிற்கு கணவனுடன் சென்ற பெண்ணுக்கு அதிர்ச்சி

கணவருடன் தொடருந்தில் கொழும்பு நோக்கி பயணித்த பெண்ணொருவரின் கைப்பையில் இருந்த 30 லட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான தங்கம் மற்றும் பணம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் கெக்கிராவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பேருவளை, கங்கனாங்கொட பிரதேசத்தில் வசிக்கும் 28 வயதுடைய பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டிற்கமைய, பொலிஸார் இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சுதந்திர தினத்தன்று தனது கணவருடன் தொடருந்தில் கொழும்பு நோக்கி பயணித்த வேளையில் தூங்கிவிட்டதாகவும், கெக்கிராவ தொடருந்து நிலையத்தை கடந்து சிறிது தூரம் சென்ற போது தொடருந்து காவலாளி ஒருவர் வந்து தொடருந்து பயணிகளுக்கு தங்களின் பொருட்கள் சரியாக உள்ளதா என பார்க்குமாறு தகவல் வழங்கியதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்பின், அவர்கள் அமர்ந்திருந்த இருக்கைக்கு அடியில் வைக்கப்பட்டிருந்த கைப்பையை எடுத்து சோதனையிட்டபோது, ​​பெட்டியில் தங்க நகைகள், கையடக்க தொலைபேசி, பணம் இல்லாததையும், பெட்டியில் தேடியபோதும் கிடைக்காததையும் உணர்ந்தனர்.

கைப்பையை யாரோ தொடுவதைக் கண்டதாக அங்கிருந்தவர்கள் கூறியுள்ளனர். இந்த திருட்டு தொடர்பில் தொடருந்து காவலர்களுக்கும் கெக்கிராவ தொடருந்து நிலையத்திற்கும் அறிவித்ததையடுத்து மருதானைக்கு சென்று மீண்டும் தனது தந்தை மற்றும் கணவருடன் கெக்கிராவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த திருட்டில் ஈடுபட்ட நபர் அல்லது குழுவை கைது செய்ய கெக்கிராவ பொலிஸ் அதிகாரிகள் குழு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...