tamilni 119 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு தொடர்பில் பொதுஜன முன்னணியின் நிலைப்பாடு

Share

ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு தொடர்பில் பொதுஜன முன்னணியின் நிலைப்பாடு

ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் எவ்வித இணக்கப்பாடுகளையும் இதுவரையில் ஏற்படுத்திக்கொள்ளவில்லை என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் பேச்சுவார்த்தைகளை நடாத்துவதற்காக நேரமொன்றை ஒதுக்கித் தருமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இதுவரையில் ஜனாதிபதி அதற்கான நேரத்தை ஒதுக்கித்தரவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து இன்னமும் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி தீர்மானிக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமது நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொள்ளக் கூடிய ஒருவருக்கே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமது கட்சி ஆதரவினை வழங்கும் என சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 60
செய்திகள்இலங்கை

புத்தாண்டு தினங்களில் நாடு முழுவதும் மதுபான விற்பனை நிலையங்கள் மூடல்.

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் ஏப்ரல் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில்...

world 59
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு தீவு முழுவதும் 2,000 அதிகாரிகள் களத்தில்!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதும் பொதுமக்களின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில்,...

world 58
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு 2வது நாளாகவும் தொடர்ச்சி: பேச்சுவார்த்தையை நிராகரித்தார் சுகாதார அமைச்சர்!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) நாடளாவிய ரீதியில் முன்னெடுத்துள்ள 48 மணிநேர அடையாளப் பணிப்புறக்கணிப்புப்...

world 57
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹோமாகமவில் பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையே மோதல்: 19 வயது இளைஞன் மரணம்; ஐவர் கைது!

ஹோமாகம, மொரகஹஹேன பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தனியார் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில்...