tamilnig 5 scaled
இலங்கைசெய்திகள்

ஒக்டோபர் 14 ஆம் திகதி புதிய ஜனாதிபதி

Share

ஒக்டோபர் 14 ஆம் திகதி புதிய ஜனாதிபதி

ஒக்டோபர் 14 ஆம் திகதி இலங்கையின் புதிய ஜனாதிபதி ஒருவர் நியமிக்கப்படுவார் என காணி மற்றும் இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஒக்டோபர் முதல் வாரம் எவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மீண்டும் ஒரு முறையாவது ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக்கும் பொறுப்பு நாட்டு மக்களுக்கு வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிகழ்வொன்றில் கலந்துகொண்டு நேற்று கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஒரு நாட்டை மிகக் குறுகிய காலத்தில் வங்குரோத்து நிலையில் இருந்து காப்பாற்றிய உலகின் ஒரே தலைவர் ரணில் விக்ரமசிங்க எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ரணில் விக்ரமசிங்க நோய்வாய்ப்பட்டவர்களைக் குணப்படுத்தும் சிறந்த வைத்தியர் என்றும், அவர் தயக்கம் காட்டினாலும் மக்கள் இன்னும் ஒரு சந்தர்ப்பத்தை அவருக்கு வழங்கி நாட்டின் ஜனாதிபதியாக நியமிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் மூன்று விதமான தேர்தல்களில் வெற்றிபெற்ற குழுக்களில் 47 வீதமானவர்களைக் கண்டுபிடிப்பது கனவாகவே காணப்படுவதாகவும் அந்தக் கனவுகள் ஒருபோதும் நனவாகாது எனவும் ஹரின் பெர்னாண்டோ கூறியுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 47
செய்திகள்இந்தியா

டெல்லி AI உச்சி மாநாடு: கடைசி நேரத்தில் பின்வாங்கிய பில் கேட்ஸ்! – எப்ஸ்டீன் விவகார சர்ச்சை காரணமா?

டெல்லியில் நடைபெற்று வரும் ‘இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில்’ (India AI Impact...

image 1200x800 45
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் அதிரடி! – ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் கைது; எப்ஸ்டீன் விவகாரத்தில் அரசு ரகசியங்களை கசியவிட்டாரா?

பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான தொடர்புகள் மற்றும் பொது அலுவலகத்தில் தவறான நடத்தையில் ஈடுபட்டதாக எழுந்த...

image 1200x800 44
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலைமன்னார் – இராமேஸ்வரம் கப்பல் சேவை மீண்டும்? – 310 மீட்டர் நீளத்தில் புதிய இறங்குதுறை அமைக்கத் திட்டம்!

இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க தலைமன்னார் இறங்குதுறையை (Jetty) நவீனமயமாக்குவதற்கான முதற்கட்ட மேம்பாட்டுத் திட்டம்...