tamilnig 3 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

தனது கட்சியை விமர்சிப்பவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

Share

தனது கட்சியை விமர்சிப்பவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தன்னையும் தனது கட்சியையும் விமர்சிப்பவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கத் தயங்கமாட்டேன் என்று எச்சரித்துள்ளார்.

முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் (ஓய்வுபெற்ற) தயா ரத்நாயக்கவை கட்சியின் மூத்த ஆலோசகராக நியமிக்க பிரேமதாச எடுத்த தீர்மானத்தை நாடாளுமன்ற உறுப்பினர் பொன்சேகா விமர்சித்த சில நாட்களுக்குப் பின்னர் பிரேமதாசவின் இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது.

இது குறித்து அவர் தெரிவித்ததாவது,

“யாருக்கு நான் கட்சி உறுப்புரிமை வழங்க வேண்டும் என்று யாரும் தமக்கு சொல்ல வேண்டாம். எனக்கு அறிவுரை கூற முயல்பவர்களை புறக்கணிப்பேன்.

கட்சியை விமர்சிப்பவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க துணிச்சலான முடிவுகளை எடுக்க தயங்கமாட்டேன்.

கட்சியைப் பாதுகாப்பதும், எதிர்காலத் தேர்தல்களில் அது வெற்றிபெறுவதைப் பார்ப்பதும் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களின் கடமையாகும்.

அந்தக் கடமையைச் செய்ய முடியாதவர்கள் வெளியேற வேண்டும். சிலர் தமது தந்தைக்கும் தனக்கும் இடையே ஒற்றுமையை வரைய முயற்சிக்கிறார்கள்.

இருப்பினும், தாம், தமது தந்தையின் அபிவிருத்தி மாதிரியை மட்டுமே ஏற்றுக்கொள்கிறேன். எனினும் தமக்கும் தமது தந்தைக்கும் இடையே வேறுபாடுகள் உள்ளன” என அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Muthur
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாவிலாறு அணைக்கட்டு உடைந்ததால் வெள்ளம்: திருகோணமலை-மட்டக்களப்பு வீதி மூழ்கியது; 309 பேர் வான்வழியாக மீட்பு!

அதிக மழைவீழ்ச்சி காரணமாக நிரம்பி வழிந்த திருகோணமலை மாவிலாறு அணைக்கட்டின் ஒரு பகுதி நேற்று (நவம்பர்...

images 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாயாறு பிரதான பாலம் உடைந்தது: முல்லைத்தீவிலிருந்து மணலாறு, திருகோணமலை போக்குவரத்து முற்றாகத் தடை!

நாட்டில் தொடர்ந்து நிலவி வரும் வெள்ளப் பெருக்கு காரணமாக, முல்லைத்தீவில் உள்ள நாயாறு பிரதான பாலம்...

images 13
செய்திகள்இலங்கை

வெள்ளம் பாதித்த பகுதிகளில் ‘கொதித்தாறிய நீரை’ மட்டுமே அருந்தவும்: சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!

வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்கள் குடிநீரைப் பயன்படுத்துவதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்று...

img 692c75999ccf8
செய்திகள்இலங்கை

ஹெலிகொப்டர் விபத்தில் விங் கமாண்டர் நிர்மால் சியம்பலாபிட்டிய உயிரிழப்பு: விமானப்படை இரங்கல்!

சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது, வென்னப்புவ, லுணுவில...