tamilni 6 scaled
இலங்கைசெய்திகள்

பிரதமரின் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்ட STF அதிகாரியின் விபரீத முடிவு

Share

பிரதமரின் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்ட STF அதிகாரியின் விபரீத முடிவு

அலரி மாளிகையில் கடமையாற்றிய பொலிஸ் விசேட அதிரடிப்படையின் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்க்க முயற்சித்துள்ளார்.

பிரதமரின் பாதுகாப்புப் பிரிவின் கொள்ளுப்பிட்டி முகாமில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் டி.கே.எம்.பிரேமசிறி என்பவரே இதன் போது காயமடைந்துள்ளார்.

அவர் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த அதிகாரிக்கு வழங்கப்பட்ட T-56-5106523 எனும் இலக்கத்திலான துப்பாக்கியால் குறித்த கான்ஸ்டபிள் நேற்று முன்தினம் H1 நுழைவாயிலில் நிறுவப்பட்டுள்ள பகுதியில் கடமையாற்றிக் கொண்டிருந்த போது தன்னைத்தானே சுட்டுக் கொண்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இடது கையில் துப்பாக்கிச் சூட்டு காயம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.

இதுகுறித்து, மருத்துவமனையில் இருக்கும் அதிகாரியிடம் விசாரணை நடத்தியபோது, ​​ஆறு மாதங்களுக்கு முன், தன் தாய் இறந்து விட்டதாகவும், தாய் இறந்த பின், தந்தை பலமுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், வீட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் சகோதரனுடன் தொடர்ந்து முரண்பாடு ஏற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவங்களால் ஏற்பட்ட மன அழுத்தமும், தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாக அவர் வாக்குமூலம் அளித்ததாக மூத்த பொலிஸ் அதிகாரி மேலும் கூறினார்.

சம்பவம் தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....