tamilnaadi 90 scaled
இலங்கைசெய்திகள்

தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் பதவி தொடர்பான வதந்திக்கு முற்றுப்புள்ளி

Share

தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் பதவி தொடர்பான வதந்திக்கு முற்றுப்புள்ளி

75 வருடங்களாக பேணப்பட்டு வரும் பாரம்பரியத்திற்கமைய மட்டக்களப்பை சேர்ந்த ஒருவரே பொதுச்செயலாளராக தெரிவு செய்யப்படுவார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறுகையில்,”இலங்கை தமிழரசு கட்சியின் புதிய தலைவர் தெரிவை தொடர்ந்து இன்றைய தினம் 11 மணியளவில் திருகோணமலையில் வைத்து ஏனைய தெரிவுகள் நடைபெறவுள்ளன.

தலைவர் தெரிவின் போது பொது சபையில் பங்குபற்றியவர்களே இன்றைய நிகழ்விலும் பங்குபற்றுவார்கள்.

இதற்கு முன்னர் ஏற்கனவே இருந்த இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம்,முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இடம்பெற இருக்கின்றது.

இதன்பின்னர் செயலாளர்,துணை செயலாளர், துணை தலைவர்கள் என்ற வகையில் சுமார் 33 பேர் மத்தியகுழு உறுப்பினர்களாக தெரிவு செய்யப்படவுள்ளனர்.

கடந்த 19 ஆம் திகதி நடைபெற்ற கூட்டதிற்கு பின்னர் நான் செயலாளராக ஞானமுத்து சிறீநேசனை முன்மொழிந்தேன். இதற்கு பலரும் நான் ஏன் அவரை முன்மொழிய வேண்டும் என கேட்டனர்.அதற்கு காரணம் இருக்கின்றது.

2019 ஆம் ஆண்டு இறுதியை இடம்பெற்ற தேசிய மாநாட்டின் போது,பொதுச்செயலாளராக எனது பெயரை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் ஐயா முன்மொழிந்திருந்தார்.அதனை எவருமே வழிமொழியவில்லை.

காரணம் ஏற்கனவே இருந்தவர்களை,தலைவர், செயலாளராக அமர்த்த அனைவரும் விரும்பினார்கள் அதனால் நானும் அதை பெரிதுபடுத்தவில்லை.

இப்போது எனக்கெதிராக பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.அதாவது நான் செயலாளராக வர முயற்சிக்கிறேன்,அதனால் தான் தலைவர் தெரிவில் சிறீதரனை ஆதரித்தேன் என கூறுகின்றனர்.அதை முறியடிக்கவே நான் தலைவர் தெரிவுக்கு முன்பாகவே ஞானமுத்து சிறீநேசனை முன்மொழிந்திருந்தேன்.

இன்றைய செயலாளர் தெரிவிலும் மட்டக்களப்பிலிருந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீநேசனை தெரிவு செய்யவே அங்கு இருப்பவர்களும் கலந்துரையாடியுள்ளனர்.

இதற்கமைய இன்றைய மத்தியகுழு கூடத்திற்கும் இந்த முடிவு செல்லவுள்ளது. எனவே நிச்சயமாக போட்டிகளின்றி சிறீநேசனை பொதுச் செயலாளராக தெரிவு செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...