tamilni 366 scaled
இலங்கைசெய்திகள்

மக்களை தம்வசப்படுத்த நாமல் புதிய திட்டம்

Share

மக்களை தம்வசப்படுத்த நாமல் புதிய திட்டம்

அனைத்து கிராம சேவகர் பிரிவுகளிலும் உள்ள கிராம தலைவர்களை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சந்திக்கவுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தசபல சேனா வேலைத்திட்டத்தின் கீழ் அவர் இந்த நடவடிக்கை எடுத்துள்ளார். மாநகர சபைகள், பிரதேச சபைகள் மற்றும் கிராம மட்டங்களின் தலைவர்கள் அனைவரும் இங்கு கூடுவார்கள் என நாமல் ராஜபக்ஷ கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்காக இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

கொழும்பு மாவட்டத்தை மையமாக வைத்து நேற்று மொரட்டுவையில் இருந்து இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதென என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் எந்தவொரு தேர்தலுக்கும் கட்சியை தயார்படுத்துவதும், அடிமட்டத்தில் கட்சியை பலப்படுத்துவதுமே இங்கு நோக்கமாகும் என நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

இதுதவிர பொதுஜன பெரமுன மீது சுமத்தப்பட்டுள்ள பொய்யான குற்றச்சாட்டுகள் மற்றும் உண்மை என்ன என்பது குறித்து கிராம தலைவர்களுக்கு விளக்கமளிக்க தயார் எனவும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

மேலும், ஒரு கிராம சேவகர் பிரிவில் இருந்து 10 செயற்பாட்டாளர்கள் தெரிவு செய்யப்பட்டு கட்சியின் பொய்யான அறிக்கைகளுக்கு பதிலளிக்க தயார் எனவும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
world 161
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விபத்துகளால் 713 பேர் பலி: வாகன ஓட்டுநர்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

தற்போது நிலவி வரும் பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துவதையும், கவனக்குறைவாகச் செயல்படுவதையும் தவிர்க்குமாறு இலங்கை...

world 160
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நிகழ்ந்த விபத்துக்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள்: பொலிஸாரின் அதிரடி சோதனைகள்!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மணிநேரங்களில் இடம்பெற்ற விபத்துக்கள் மற்றும் பொலிஸ் சோதனைகளில் பலர்...

world 159
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பட்டாசு வெடிக்கும் போது அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்!

சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது எதிர்பாராத விதமாக இடம்பெறும் பட்டாசு விபத்துகளைத் தடுப்பது குறித்து சுகாதார...

world 158
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கல்கிசையில் மோதல்: இலங்கை பெண்ணைத் தாக்கிய உக்ரைன் பெண் விளக்கமறியலில்!

கல்கிசையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு முன்பாக கடந்த 12ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம்...