tamilni 314 scaled
இலங்கைசெய்திகள்

வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள 700 பில்லியன் டொலர்

Share

வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள 700 பில்லியன் டொலர்

அரசியல்வாதிகளால் சட்டவிரோதமான முறையில் ஏறக்குறைய 700 பில்லியன் டொலர் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஶ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு – வவுணதீவுப் பகுதியில் நேற்றைய தினம் (20.01.2024) இடம்பெற்ற நிகழ்வென்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், “பொருட்களின் விலைகள் இப்போது அதிகரிக்கப்பட்டுள்ளன. இது மேலும் அதிகரிக்கப்பட்டு பொருட்கள் வாங்க முடியாத நிலை எதிர்காலத்தில் ஏற்படவுள்ளது.

அரசியல்வாதிகள் மற்றும் சில செல்வந்த முதலைகளால் சட்டவிரோதமான முறையில் ஏறக்குறைய 700 பில்லியன் டொலர் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது.

இது, முன்னர் 56 பில்லியன் டொலர் என்றார்கள். இப்போது 700 பில்லியன் டொலர் என கூறப்படுகின்றது. 56 பில்லியன் டொலர் என்றாலும் அது இலங்கைக்கு கொண்டு வரப்படுமாக இருந்தால் மக்களிடம் வரி அறவிட வேண்டியதில்லை, பொருட்களை அதிக விலைக்கு விற்க வேண்டியதில்லை.

அரசு செய்த ஊழல், மோசடிகள், அடாவடி தனமான செலவீனங்களுக்காக இப்போது வரி என்ற பெயரில் மக்களின் தலையில் சுமை ஏற்றப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் இரண்டு இராஜாங்க அமைச்சர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் அரசாங்கத்தின் வரிவிதிப்பு சட்டங்களுக்கு நாடாளுமன்றத்தில் கை உயர்த்தி சம்மதம் தெரிவித்து விட்டு, இங்கு வந்து அரசாங்கம் மக்கள் மீது வரி விதிக்கக் கூடாது எனும் தோரணையில் பேசுகின்றார்கள்.

இவர்கள் பூனைக்கும் தோழன் பாலுக்கும் காவலன் என்பது போல் இருக்கின்றார்கள். அரசாங்கத்துடன் ஒன்றாக இருந்தால் மக்களுக்கு கிடைக்க வேண்டியவற்றை பெற்றுக் கொடுக்க வேண்டும். இல்லா விட்டால் அரசிலிருந்து வெளியேற வேண்டும்.

மட்டக்களப்பில் கால்நடை பண்ணையாளர்கள் தாம் வாழ்வதற்காக போராடிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் இதுவரை சுமார் 252 மாடுகளை இழந்திருக்கின்றார்கள்.

கிழக்கை பாதுகாப்போம், கிழக்கை மீட்போம் என்கின்ற பிள்ளையான், வியாழேந்திரன் போன்றோர் கைகட்டி, வாய் பொத்தி மெளனிகளாக இருக்கின்றனர்” என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 133
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வட்டுக்கோட்டையில் பயங்கரம்: இளைஞர் வெட்டிக்கொலை – இருவர் படுகாயம்!

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட தொல்புரம் பகுதியில் நேற்றிரவு (ஏப்ரல் 12, 2026) இடம்பெற்ற மோதலில்...

world 132
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான உடன்படிக்கை சாத்தியமானது: ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் நம்பிக்கை!

அமெரிக்கா தனது ஆதிக்க மனப்பான்மையைக் கைவிட்டு, ஈரான் தேசத்தின் உரிமைகளை மதித்து நடந்தால், இரு நாடுகளுக்கும்...

world 130
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிலக்கரி டெண்டர் முறைகேடு: சி.ஐ.டி-யில் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் புகார்!

நிலக்கரி ஒப்பந்தப்புள்ளி (Tender) செயல்முறையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரணை...

world 136
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யால தேசியப் பூங்காவில் சட்டவிரோத வேட்டை: 92 கிலோ இறைச்சியுடன் இருவர் கைது!

யால தேசியப் பூங்காவின் 02-ம் மண்டலப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் வனவிலங்குகளை வேட்டையாடி, அவற்றின் இறைச்சியை...