tamilnaadi 61 scaled
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணத்தில் பொலிஸார் விதித்துள்ள தடை

Share

யாழ்ப்பாணத்தில் பொலிஸார் விதித்துள்ள தடை

யாழ்ப்பாணத்தில் பறக்கும் பட்டத்தின் கயிற்றில் தொங்கிய நிலையில் செல்பி எடுக்க பொலிஸார் தடை விதித்துள்ளனர்.

பட்டத்தின் உதவியுடன் இளைஞன் ஒருவர் வானில் பறக்க முற்பட்ட சம்பவத்தையடுத்து பொலிஸார் நேற்று முதல் தடை விதித்துள்ளனர்.

இவ்வாறான சம்பவங்களால் ஏற்படக்கூடிய ஆபத்தான சூழ்நிலைகளை குறைக்கும் வகையில் பொலிஸார் இந்தத் தடையை விதித்துள்ளனர்.

தொண்டமனாறு பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் பட்டம் விட பயன்படுத்தும் கயிற்றில் தொங்கி வானத்தில் 80 அடி உயரம் வரை சென்ற காணொளி அண்மைய நாட்களில் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டன.

இது குறித்து எழுந்துள்ள சர்ச்சையை அடுத்து பொலிஸார் இந்த முடிவை எடுத்துள்ளனர்.

தடையை மீறி பட்டத்தின் கயிற்றில் தொங்கி வானில் பறக்க முற்படும் இளைஞர்கள் விபத்துக்களை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்படுவார்கள் என யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...