tamilnih 86 scaled
இலங்கைசெய்திகள்

வற் வரிக்காக பதிவு செய்ய வேண்டிய நிறுவனங்கள்

Share

வற் வரிக்காக பதிவு செய்ய வேண்டிய நிறுவனங்கள்

வருடாந்த விற்பனை புரள்வு 80 மில்லியனை விடவும் அதிகம் என்றால் அந்த நிறுவனங்கள் பெறுமதி சேர் வரிக்காக பதிவு செய்ய வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விற்பனை புரள்வு தொகை விரைவில் 60 மில்லியனாக குறைக்கப்பட உள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

80 மில்லியன் ரூபாவிற்கும் மேற்பட்ட விற்பனை புரள்வுடைய வர்த்தக நிறுவனங்கள் கைத்தொழில் நிறுவனங்கள் வற் வரிக்காக தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

விற்பனை புரள்வு தொகையை 60 மில்லியனாக குறைக்கும் சட்டம் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் வாடிக்கையாளர்களிடமிருந்து, பெறுமதி சேர் அறவீடு செய்யும் நிறுவனங்கள் பதிவு இலக்கத்தை பகிரங்கமாக காட்சிப்படுத்த வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...