tamilni 307 scaled
இலங்கைசெய்திகள்

டயானா கமகேவிடம் 10 கோடி பேரம் பேசிய ஜனாதிபதி வேட்பாளர்

Share

டயானா கமகேவிடம் 10 கோடி பேரம் பேசிய ஜனாதிபதி வேட்பாளர்

இந்த வருடம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெற உள்ளதால் பல ஜனாதிபதி வேட்பாளர்கள் தமது தேர்தல் நடவடிக்கைகளுக்காக நாடாளுமன்ற உறுப்பினர்களை தம் பக்கம் இழுக்க பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து தெரிவிக்கப்படுகிறது.

இவ்வகையில் ஜனாதிபதித் ​தேர்தலின் போது ராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்காக வேட்பாளர் ஒருவர் பத்து ​கோடி வரை பேரம் பேசியுள்ளாதாக அரசியல் வட்டாரங்களில் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு பல வேட்பாளர்கள் தமது தேர்தல் பரப்புரைகளை இப்போதிருந்தே தீவிரமாக முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில் தமது பிரச்சார நடவடிக்கைகளுக்கு முக்கிய அரசியல்வாதிகள் மற்றும் பிரபலங்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்ளவும் வேட்பாளர்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

சில வேட்பாளர்கள் எம்.பி.க்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களுக்கு ஆதரவளிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். அவ்வாறு ஆதரவைத் தரும் பட்சத்தில் பணம் மற்றும் பிற வெகுமதிகள் மற்றும் சலுகைகள் போன்றவற்றை வழங்குவதாகவும் வாக்குறுதிகளையும் அளித்துள்ளனர்.

இதேவேளை, அண்மைய நாட்களில் சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் வீட்டுக்குச் சென்ற இரண்டு பிரதான ஜனாதிபதி வேட்பாளர்கள் தமக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரங்களில் கலந்து கொள்ளுமாறு அவரிடம் ​வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அதிலும் ஒரு வேட்பாளர் தனக்கு ஆதரவளிப்பதற்காக டயனா கமகேவிடம் 10 கோடி ரூபாய் வரை அன்பளிப்பாக வழங்கத் தயாராக இருப்பதாகவும் வாக்களித்துள்ளார்.

எனினும் குறித்த வேட்பாளரின் கோரிக்கையை டயனா கமகே கடுமையாக நிராகரித்துள்ளதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

Share
தொடர்புடையது
ahr0chm6ly9jyxnzzxr0zs5zcghkawdp 4
உலகம்செய்திகள்

துப்பாக்கியைப் பிடுங்கிய ‘ஹீரோ’ அஹமது அல் அஹமதுவைச் சந்தித்த பிரதமர் அல்பானீஸ்; துப்பாக்கிக் கட்டுப்பாடு மேலும் அதிகரிப்பு!

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போண்டி கடற்கரையில் (Bondi Beach) யூதர்கள் நிகழ்வில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டின்போது, துணிச்சலுடன்...

coverimage 01 1512114047 1546165239 1562741874
இலங்கைசெய்திகள்

இலங்கையில் எயிட்ஸ் தொற்று 6% அதிகரிப்பு:உயிரிழப்புகள் 30 ஆகப் பதிவு!

இலங்கையில் எயிட்ஸ் தொற்று அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 2025ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில்...

images 5 5
உலகம்செய்திகள்

இந்தியா-ரஷ்யா இராணுவ ஒப்பந்தம்: ‘தளவாட ஆதரவு பரஸ்பரப் பரிமாற்ற’ சட்டத்துக்குப் புட்டின் ஒப்புதல்!

இந்தியா மற்றும் ரஷ்யா இடையேயான ‘Reciprocal Exchange of Logistics Support’ (தளவாட ஆதரவின் பரஸ்பரப்...

articles2FvNVHzqk0rGKKgejyoUzJ
இலங்கைசெய்திகள்

கல்வி ஒத்துழைப்பு வலுப்படுத்தல்: வெளிநாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய அமைச்சரவை அனுமதி!

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராகப் பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த...