tamilni 223 scaled
இலங்கைசெய்திகள்

14 மாதங்களில் 18 தடவை வெளிநாடுகளுக்கு பறந்த ரணில்

Share

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 12 நாள் விஜயம் மேற்கொண்டு சுவிட்ஸர்லாந்து சென்றுள்ளார்.

சுவிட்ஸர்லாந்தில் நடைபெறவுள்ள உலக பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று இலங்கையில் இருந்து சென்றுள்ளார்.

எனினும் ரணில் விக்ரமசிங்க 14 மாதங்களில் 18 தடவைகள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

வெளிநாட்டு பயணங்களுக்கு ஜனாதிபதி 200 மில்லியன் ரூபாய் கேட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி வெளிநாடு செல்வது இது 18ஆவது தடவை என இது தொடர்பில் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

பிரித்தானியாவுக்கு மூன்று முறையும், ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் இரண்டு முறையும், சீனா, கியூபா, எகிப்து, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, மாலைத்தீவு, பிலிப்பைன்ஸ், அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளுக்கு தலா ஒரு முறையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விஜயம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நான்கு லீற்றர் பெற்றோல் வைத்திருந்தவருக்கு 21 நாட்கள் சிறை: நிக்கவரட்டிய நீதிமன்றம் தீர்ப்பு

சட்டவிரோதமான முறையில் நான்கு லீற்றர் பெற்றோலைத் தனது கைவசத்தில் வைத்திருந்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட 48 வயதுடைய...

Untitled 1
செய்திகள்அரசியல்இலங்கை

இந்தியாவைப் பின்பற்றி எரிபொருள் வரியைக் குறையுங்கள்: ஜனாதிபதிக்குச் சஜித் பிரேமதாச அறைகூவல்!

இந்திய அரசாங்கம் அண்மையில் எரிபொருள் மீதான வரிகளைக் கணிசமாகக் குறைத்திருப்பதைப் போன்று, இலங்கை அரசாங்கமும் வரிகளைக்...

02 29
செய்திகள்இலங்கை

ஈரானுடன் கைக்கோர்க்கும் மைத்திரி: தூதுவர் அலிரேசா டெல்கோஷுடன் திடீர் சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh)...

02 28
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மருத்துவர்களுக்குச் சனிக்கிழமை விடுமுறை? – அரசாங்கத்திற்கு மருத்துவ நிபுணர்கள் சங்கம் அவசர கோரிக்கை!

நாட்டில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் நெருக்கடி மற்றும் அதீத விலை உயர்வு காரணமாகச் சுகாதாரத்...