tamilni 84 scaled
இலங்கைசெய்திகள்

குற்ற விசாரணைப்பிரிவின் விசாரணைகள் குறித்து பதில் பொலிஸ் மா அதிபர் அதிருப்தி

Share

குற்ற விசாரணைப்பிரிவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகள் குறித்து பதில் பொலிஸ் மா அதிபர் தேசப்பந்து தென்னக்கோன் அதிருப்தி வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் ஹரக் கட்டா தொடர்பான விசாரணைகள் குறித்தே அவர் இவ்வாறு அதிருப்தி வெளியிட்டதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த விசாரணைகள் தொடர்பில் திருப்திக்கொள்ள முடியாது என அவர் விசாரணை அதிகாரிகளை கடுமையாக சாடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஹரக் கட்டா தொடர்பான விசாரணைகள் நிலைமையை அறிந்துக்கொள்வதற்காக பதில் பொலிஸ் மா அதிபர் நேற்று குற்ற விசாரணைப்பிரிவிற்கு திடீரென சென்றுள்ளார்.

விசாரணைகள் மிகவும் மந்த கதியில் முன்னெடுக்கப்படுவதனால் மேலும் மூன்று பொலிஸ் குழுக்களை பதில் பொலிஸ் மா அதிபர் விசாரணைகளுக்காக நியமித்துள்ளார்.

உள்நாட்டில் போதைப்பொருள் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த யுக்தி என்னும் திட்டம் முன்னெடுக்கப்பட்ட போதிலும், சர்வதேச ரீதியிலான போதைப்பொருள் செயற்பாடுகளை கட்டுப்படுத்த முன்னெடுக்கப்படும் விசாரணைகளில் திருப்தி இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹரக் கட்டாவிற்கு எதிரான விசாரணைகளை துரிதப்படுத்தி சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளில் ஹரக் கட்டா சுமார் 4000 கிலோ கிராம் எடையுடைய ஹெரோயின் போதைப்பொருளை இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளதாகத் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இதுவரையில் ஹரக் கட்டாவிற்கு எதிராக எந்தவொரு போதைப்பொருள் கடத்தல் வழக்கும் தாக்கல் செய்யப்படாமை ஆச்சரியமளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

விசாரணைகளை துரிதப்படுத்தி உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அவர், குற்ற விசாரணைப் பிரிவிற்கு அறிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 24
செய்திகள்உலகம்

ஈரான் போர் நிறுத்தம் கோருகிறது: ஹோர்முஸ் ஜலசந்தி திறக்கப்படும் வரை தாக்குதல் தொடரும் என டிரம்ப் எச்சரிக்கை!

ஈரானின் புதிய தலைமை (New Regime) அமெரிக்காவிடம் போர் நிறுத்தம் கோரியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட்...

Untitled 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாளை நாடு தழுவிய அளவில் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்: 24 மணி நேரப் போராட்டத்திற்கு GMOA அழைப்பு!

நாட்டிலுள்ள அனைத்து அரச மருத்துவமனைகளையும் தழுவிய ரீதியில் நாளை (ஏப்ரல் 02, 2026) வியாழக்கிழமை காலை...

Untitled 22
செய்திகள்இந்தியா

மத்திய கிழக்கு போர் எதிரொலி: இந்தியாவில் ஏடிஎஃப் மற்றும் வர்த்தக எரிவாயு விலைகள் உயர்வு!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக உலகளாவிய எரிசக்தி செலவுகள் அதிகரித்துள்ள...

Untitled 21
செய்திகள்உலகம்

வானில் இன்று தோன்றும் ‘இளஞ்சிவப்பு நிலவு’: 50 ஆண்டுகளுக்குப் பின் நிலவுக்கான மனிதப் பயணம் தொடக்கம்!

புதிய வசந்த காலத்தின் வருகையை அறிவிக்கும் வகையில், ஏப்ரல் மாதத்தின் முதல் முழு நிலவான ‘இளஞ்சிவப்பு...