tamilni 84 scaled
இலங்கைசெய்திகள்

குற்ற விசாரணைப்பிரிவின் விசாரணைகள் குறித்து பதில் பொலிஸ் மா அதிபர் அதிருப்தி

Share

குற்ற விசாரணைப்பிரிவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகள் குறித்து பதில் பொலிஸ் மா அதிபர் தேசப்பந்து தென்னக்கோன் அதிருப்தி வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் ஹரக் கட்டா தொடர்பான விசாரணைகள் குறித்தே அவர் இவ்வாறு அதிருப்தி வெளியிட்டதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த விசாரணைகள் தொடர்பில் திருப்திக்கொள்ள முடியாது என அவர் விசாரணை அதிகாரிகளை கடுமையாக சாடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஹரக் கட்டா தொடர்பான விசாரணைகள் நிலைமையை அறிந்துக்கொள்வதற்காக பதில் பொலிஸ் மா அதிபர் நேற்று குற்ற விசாரணைப்பிரிவிற்கு திடீரென சென்றுள்ளார்.

விசாரணைகள் மிகவும் மந்த கதியில் முன்னெடுக்கப்படுவதனால் மேலும் மூன்று பொலிஸ் குழுக்களை பதில் பொலிஸ் மா அதிபர் விசாரணைகளுக்காக நியமித்துள்ளார்.

உள்நாட்டில் போதைப்பொருள் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த யுக்தி என்னும் திட்டம் முன்னெடுக்கப்பட்ட போதிலும், சர்வதேச ரீதியிலான போதைப்பொருள் செயற்பாடுகளை கட்டுப்படுத்த முன்னெடுக்கப்படும் விசாரணைகளில் திருப்தி இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹரக் கட்டாவிற்கு எதிரான விசாரணைகளை துரிதப்படுத்தி சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளில் ஹரக் கட்டா சுமார் 4000 கிலோ கிராம் எடையுடைய ஹெரோயின் போதைப்பொருளை இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளதாகத் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இதுவரையில் ஹரக் கட்டாவிற்கு எதிராக எந்தவொரு போதைப்பொருள் கடத்தல் வழக்கும் தாக்கல் செய்யப்படாமை ஆச்சரியமளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

விசாரணைகளை துரிதப்படுத்தி உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அவர், குற்ற விசாரணைப் பிரிவிற்கு அறிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
1765079066 25 693273715360b md
இலங்கைசெய்திகள்

கண்டி – கொழும்பு ரயில் பயணிகளுக்கு நாளை முதல் சிறப்பு பேருந்துகள்!

கண்டி ரயில் நிலையத்திலிருந்து கொழும்பு நோக்கிப் புகையிரதத்தில் பயணிக்கும் பயணிகளுக்காக, நாளை (டிசம்பர் 8) காலை...

image 49051e3a6e 1
இலங்கைசெய்திகள்

நிலச்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி: “மகிழ்ச்சியாகத் தூங்கப் போனோம், மண்ணுக்குள் புதைந்தோம்” – தப்பியோர் அதிர்ச்சிப் பேட்டி!

மடுசீம பூட்டாவத்த பகுதியில் ஏற்பட்ட கோரமான நிலச்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் உயிரிழந்த...

images 19
இலங்கைசெய்திகள்

அனர்த்த உயிரிழப்புகள் 627 ஆக உயர்வு: கண்டி மாவட்டத்தில் அதிக பாதிப்பு! 

நாடு முழுவதும் சமீபத்திய நாட்களில் ஏற்பட்ட மிக மோசமான வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 627...

image f1250cea24
அரசியல்இலங்கைசெய்திகள்

பூஸா சிறையில் அதிரடிச் சோதனை: 2 ஸ்மார்ட் போன்கள், 13 சிம் கார்டுகள் பறிமுதல்!

பூஸா உயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனையின்போது 2 ஸ்மார்ட் தொலைபேசிகள், 13 சிம்...