tamilni 59 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

கரிசனை காட்டுங்கள்: ரணிலிடம் சம்பிக்க கோரிக்கை

Share

‘யுக்திய’ நடவடிக்கையின் முடிவு குறித்து ஆழ்ந்த கரிசனை காட்டுமாறு ஜனாதிபதியிடம் பாட்டலி சம்பிக்க ரணவக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், ‘யுக்திய’ நீதி நடவடிக்கையில் பெற்றோர்கள் இருவர் கைது செய்யப்படும்போது, அவர்களது வீடுகளில் பாதுகாப்பற்ற நிலை ஏற்படுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

இதன்போது, பாதாள உலக செயற்பாடுகளில் சிறுவர்கள் இணையவும், சிறுமிகள் விபச்சாரத்திற்கு செல்லவும் வழியேற்படுகின்றது என்றும் சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பு உட்பட பல பகுதிகளில் பல பெற்றோர்கள் கைது செய்யப்பட்டுள்ளதால் அவர்களின் பிள்ளைகளுக்கு உணவு மற்றும் பாதுகாப்பு வழங்க யாரும் இல்லை.

அத்துடன், சில குழந்தைகளுக்கு கூலித் திறன் இல்லை என்பதோடு சட்டத்தரணிகளுக்கு செலுத்த பணம் இல்லை என்றும் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இன்னும் போதைப்பொருள் விநியோகத் தொழிலின் சுறாக்களை பொலிஸார் கைது செய்ததாக எந்த செய்தியும் வரவில்லை.

முக்கிய சந்தேகநபர்களின் பெயர்கள் பெரும்பாலும் ஊடகங்களில் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் பொலிஸாரால் இன்னும் அவர்களை கைது செய்ய முடியவில்லை.

மேலும், கடந்த நாட்களில் கனரக வாகனங்களை பயன்படுத்தி கடற்கரையில் உள்ள விருந்தகங்களை பொலிஸார் தகர்த்துள்ளனர்.

கடற்கரையில் உள்ள அனுமதியற்ற கட்டுமானங்களை அகற்ற கடலோர பாதுகாப்பு துறைக்கு முழு அதிகாரம் உள்ளது.

எனினும், அவற்றை அகற்ற நீதிமன்ற உத்தரவு பெறுவதற்கு பதிலாக, தேர்ந்தெடுக்கப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களை அகற்றி, போதைப்பொருள் வியாபாரத்தில் சம்பாதித்த பணத்தில் அந்த கட்டுமானங்கள் செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிடுவது சட்டத்திற்கு எதிரானதாகும்.

தொடர்ந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட விருந்தகங்களை தகர்ப்பதற்கும் மற்றைய விருந்தகங்கள், தமது தொழிலைத் தொடர அனுமதிப்பதற்கும் இடையில் முக்கியமான தொடர்பு இருப்பதாக ரணவக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 8
செய்திகள்இலங்கை

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு ஒத்திவைப்பு: மழை காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி 19-இல் மீண்டும் ஆராய முடிவு!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் குறித்துத் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது....

image d1460108ca
இலங்கைசெய்திகள்

உயிர் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்: ஒட்டுசுட்டான் பனிக்கன்குளத்தில் தொடருந்து கடவை அமைக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில், தொடருந்து கடவை...

25 690859776f0a2
செய்திகள்இலங்கை

காவல்துறைக் காவலில் இருந்த சந்தேகநபர் உயிரிழப்பு: கந்தேகெட்டிய சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள்!

நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இரண்டு பிடியாணைகளின் பேரில் கைது செய்யப்பட்ட 46 வயதுடைய சந்தேக நபர் ஒருவர்,...