tamilni 66 scaled
இலங்கைசெய்திகள்

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரிக்கு மில்லியன் ரூபா இழப்பீடு

Share

கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி மாத்தறை – வெலிகமவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரியின் குடும்பத்துக்கு 4.2 மில்லியன் ரூபாய் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த உபுல் சமிந்த என்ற அதிகாரியின் குடும்பத்துக்கே இவ்வாறு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

இந்த இழப்பீட்டு தொகையில் ஜனாதிபதி செயலகம் 2.5 மில்லியன் ரூபாயையும், இலங்கை பொலிஸ் திணைக்களம் 1.7 மில்லியன் ரூபாயையும் வழங்கியுள்ளன.

வெலிகம விருந்தகம் ஒன்றுக்கு அருகாமையில் பொலிஸார் மேற்கொண்ட யுக்திய சோதனையின் போதே உபுல் சமிந்த துப்பாக்கிச் சூட்டுக்கு இழக்காகி உயிரிழந்ததுடன் மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயமடைந்தார்.

இவ்வாறு கடமையாற்றிய நிலையில் உயிரைத் தியாகம் செய்த பொலிஸ் அதிகாரியின் இழப்பிற்காக அவரின் குடும்பத்துக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share
தொடர்புடையது
4be209b0 d4fb 11f0 949c 45d05c88eada
உலகம்செய்திகள்

ரஷ்யாவுக்கு நிலம் இல்லை என்ற நிபந்தனையுடன் அமெரிக்காவிடம் சமர்ப்பிக்க உக்ரைன் தயார்!

ரஷ்யாவுடனான போரை முடிவுக்குக் கொண்டு வரும் முகமாக, மாற்றியமைக்கப்பட்ட புதிய அமைதித் திட்டத்தை அமெரிக்காவிடம் சமர்ப்பிக்க...

22 61ea2c4754d53
இலங்கைசெய்திகள்

தென் கொரியப் புலம்பெயர் இலங்கையர் உதவி: 48 மணி நேரத்தில் திரட்டப்பட்ட ரூ. 38.43 மில்லியன் நிவாரண நிதி பிரதமரிடம் கையளிப்பு!

தென் கொரியாவில் தொழில்புரியும் இலங்கையர்களால் திரட்டப்பட்ட 38.43 மில்லியன் ரூபாய் பெறுமதியான நிதி, இலங்கையில் அனர்த்தத்தால்...

image 2589f1a804
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நுவரெலியா பொருளாதார மையத்திலிருந்து கொழும்புக்கு 73,000 கிலோகிராம் மரக்கறிகள் அனுப்பப்பட்டன: விலைகள் குறித்த விபரம் உள்ளே!

நுவரெலியா பொருளாதார மையத்திலிருந்து இன்று (09) சுமார் 73,000 கிலோகிராம் மரக்கறிகள் கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது....

thailand cambodia border
உலகம்செய்திகள்

தாய்லாந்துடனான மோதலில் கம்போடியாவில் 7 பேர் பலி: 20,000 பேர் வெளியேற்றம்!

தாய்லாந்துடனான சமீபத்திய எல்லை மோதலில் கம்போடியாவில் 07 பேர் கொல்லப்பட்டதாகவும், சுமார் 20 பேர் காயமடைந்துள்ளதாகவும்...