tamilni 66 scaled
இலங்கைசெய்திகள்

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரிக்கு மில்லியன் ரூபா இழப்பீடு

Share

கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி மாத்தறை – வெலிகமவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரியின் குடும்பத்துக்கு 4.2 மில்லியன் ரூபாய் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த உபுல் சமிந்த என்ற அதிகாரியின் குடும்பத்துக்கே இவ்வாறு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

இந்த இழப்பீட்டு தொகையில் ஜனாதிபதி செயலகம் 2.5 மில்லியன் ரூபாயையும், இலங்கை பொலிஸ் திணைக்களம் 1.7 மில்லியன் ரூபாயையும் வழங்கியுள்ளன.

வெலிகம விருந்தகம் ஒன்றுக்கு அருகாமையில் பொலிஸார் மேற்கொண்ட யுக்திய சோதனையின் போதே உபுல் சமிந்த துப்பாக்கிச் சூட்டுக்கு இழக்காகி உயிரிழந்ததுடன் மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயமடைந்தார்.

இவ்வாறு கடமையாற்றிய நிலையில் உயிரைத் தியாகம் செய்த பொலிஸ் அதிகாரியின் இழப்பிற்காக அவரின் குடும்பத்துக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share
தொடர்புடையது
49b63185 90f2 4718 86a9 514694fd4c00
செய்திகள்இலங்கை

வாக்குறுதி அளித்தபடி நிறைவேற்று ஜனாதிபதி முறை நிச்சயமாக ஒழிக்கப்படும் – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனத்தில் உறுதியளித்தவாறு, நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமை கட்டாயம் ஒழிக்கப்படும்...

harini 07 02 2025 1 1000x600 1
செய்திகள்உலகம்

மிஸ் பின்லாந்து பட்டம் பறிப்பு – ஆசிய நாடுகளிடம் மன்னிப்பு கோரினார் பின்லாந்து பிரதமர்!

ஆசியர்களைக் கேலி செய்யும் வகையில் இனவெறிப் போக்கைக் வெளிப்படுத்திய புகாரில், 2025-ஆம் ஆண்டுக்கான மிஸ் பின்லாந்து...

1598682810 0047
செய்திகள்உலகம்

ஆர்ட்டிக் திமிங்கிலங்களில் அபாயகரமான வைரஸ் பாதிப்பு: ஆளில்லா விமானங்கள் மூலம் புதிய கண்டுபிடிப்பு!

ஆர்ட்டிக் கடலில் வாழும் திமிங்கிலங்களின் ஆரோக்கியத்தைக் கண்டறிய ஆளில்லா விமானங்கள் (Drones) மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில்,...

Progress review meeting of the Ministry of Transport 1
இலங்கைஅரசியல்செய்திகள்

நாடு மீண்டும் திவால் நிலைக்குத் தள்ளப்படாது – புள்ளிவிபரங்களுடன் ஜனாதிபதி அநுர குமார அதிரடி விளக்கம்!

பேரிடர் நிவாரணத்திற்காக ஒதுக்கப்பட்ட 500 பில்லியன் ரூபா நிதியினால் நாடு மீண்டும் திவால்நிலைக்குச் செல்லும் என்ற...