tamilnih 15 scaled
இலங்கைசெய்திகள்

போதைப்பொருள் வியாபாரி வெட்டிப் படுகொலை

Share

காலியில் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் வியாபாரி ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தப் பயங்கர சம்பவம் நேற்று (02) காலி – இக்கடுவை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

மூன்று பிள்ளைகளின் தந்தையான 45 வயதுடைய ஜயலத் குமாரசிறி என்ற நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

அவரது வீட்டுக்கு அருகில் உள்ள ஒழுங்கையில் வைத்து அவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முச்சக்கரவண்டி ஒன்றில் கூரிய ஆயுதங்களுடன் வந்த மூவர், மேற்படி நபரின் தலையையும், இரண்டு கைகளையும், கால் ஒன்றையும் துண்டுதுண்டாக வெட்டிப் படுகொலை செய்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

போதைப்பொருள் வியாபாரத்தில் ஏற்பட்ட போட்டி காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றிருக்கலாம் என்று சந்தேகம் வெளியிட்டுள்ள பொலிஸார், கொலைச் சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
1720617259 Piyumi 2
செய்திகள்இலங்கை

பாதாள உலகக் குற்றவாளி ‘கெஹல்பத்தர பத்மே’வுடனான தொடர்பு: நடிகை பியூமி ஹன்சமாலியிடம் குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணை!

தற்போது பொலிஸ் காவலில் உள்ள பாதாள உலகக் குற்றவாளியான ‘கெஹல்பத்தர பத்மே’வுடனான உறவு குறித்து நடிகை...

articles2F7n4ENzjaUwYHj2nMIZLh
செய்திகள்இலங்கை

கட்டுப்பாட்டு விலையை மீறி விற்பனை: பொத்துவில் வர்த்தக நிலையத்திற்கு ரூ. 1 இலட்சம் அபராதம்!

அரசாங்க கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்குக் குடிநீர் போத்தலை விற்பனை செய்த குற்றத்திற்காக, பொத்துவில்...

How to Help Your Teen Through a Panic Attack too much going on
செய்திகள்இலங்கை

இளம் பெண்கள் மற்றும் மாணவிகளிடையே ‘பதட்டத் தாக்குதல்’ அதிகரிப்பு குறித்து அரச வைத்தியர்கள் சங்கம் கவலை!

நாடு முழுவதும் உள்ள இளம் பெண்கள் மற்றும் மாணவிகளிடையே பயம் மற்றும் மனத்தாக்கம் (Panic Attack)...

25 68cd8eedd5e90
செய்திகள்இலங்கை

பாதாள உலகக் குற்றவாளி ‘கெஹெல்பத்தர பத்மே’வின் ரூ. 50 மில்லியன் சொத்துக்கள் பறிமுதல்!

தற்போது கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் பாதாள உலகக் குற்றவாளியான ‘கெஹெல்பத்தர பத்மே’வின் ரூ. 50...