31 11
இலங்கைசெய்திகள்

புதிய நாடாளுமன்றத்தில் ஒரு வருடத்துக்குள் அரசமைப்பு: ரணில் உறுதி

Share

புதிய நாடாளுமன்றத்தில் ஒரு வருடத்துக்குள் அரசமைப்பு: ரணில் உறுதி

ஜனாதிபதித் தேர்தலையடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் ஒரு வருட காலத்துக்குள் புதிய அரசமைப்பைத் தயாரிக்கும் பொறுப்பை நான் நாடாளுமன்றத்துக்கு வழங்குவேன் என எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில்இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘ரணிலுடன் இலங்கைக்கு வெற்றிகரமான ஐந்து வருடங்கள்’ என்ற தொனிப்பொருளில் தேர்தல் விஞ்ஞாபனம் நேற்றுமுன் தினம் வியாழக்கிழமை கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் ‘இலங்கையை வெற்றியடையச் செய்வோம்’ என்ற உப தலைப்பிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாது,

“நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்வதா? இல்லையா? என்ற தீர்மானம் புதிய நாடாளுமன்றத்தால் எடுக்கப்படும். புதிய தேர்தல் முறையை அறிமுகம் செய்யும் பணியும் புதிய நாடாளுமன்றத்தால் முன்னெடுக்கப்படும்.

சட்டவாக்கப் பேரவையின் அறிக்கைக்கு அமைய மாகாண சபை பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளை உள்ளடக்கியதாக இரண்டாவது மந்திரி சபை நிறுவப்படும்.

மாகாண சபைகளுக்கு அரசமைப்பு மற்றும் சட்டங்களால் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுகின்றனவா என்பதை மேற்பார்வை செய்யும் அதிகாரம் இந்த மந்திரி சபைக்கு வழங்கப்படும்.” – என்றுள்ளது.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...