tamilni 393 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையில் மிகப்பெரியதொரு அரசியல் மாற்றம்

Share

இலங்கையில் மிகப்பெரியதொரு அரசியல் மாற்றம்

2023ஆம் ஆண்டை காட்டிலும் 2024ஆம் ஆண்டில் பிரச்சினைகள் தீவிரமடையும். வரி கொள்கை நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மையை கேள்விக்குள்ளாக்கும் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதியின் கட்டளைகளுக்கு அமையவே பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் செயற்படுகிறார்கள். வரி தொடர்பில் அவர் எடுக்கும் தீர்மானங்கள் அனைத்துக்கும் கண்களை மூடிக் கொண்டு ஆதரவு வழங்கி விட்டு வரி அதிகரிப்புக்கு நாங்கள் எதிர்ப்பு என்று மக்கள் மத்தியில் குறிப்பிடுகிறார்கள்.

வரி அதிகரிப்பை தவிர எவ்வித திட்டங்களையும் ஜனாதிபதி செயற்படுத்தவில்லை. வெளிநாட்டு கையிருப்பு பற்றாக்குறையால் தான் நாடு வங்குரோத்து நிலையடைந்தது. ஆனால் வெளிநாட்டு கையிருப்பை அதிகரித்துக் கொள்ள நடைமுறைக்கு சாத்தியமான செயற்திட்டங்கள் செயற்படுத்தப்படவில்லை.

முறையற்ற வகையில் வற் வரி உட்பட சகல வரிகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. 2023 ஆம் ஆண்டை காட்டிலும் அடுத்த ஆண்டில் பிரச்சினைகள் தீவிரமடையும்.

வரி கொள்கை நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மையை கேள்விக்குள்ளாக்கும். மக்கள் போராட்டங்கள் மீண்டும் தலைதூக்கும்.

பொருளாதார மீட்சிக்காக அரசாங்கம் எடுக்கும் சகல தீர்மானங்களும் நாட்டு மக்களை நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளது.

வரி கொள்கை அடுத்த ஆண்டு அரசியல் ரீதியிலும் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என குறிப்பிட்டார்.

Share
தொடர்புடையது
images 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காட்டு யானையைச் சித்திரவதை செய்து தீ வைத்த சம்பவம்: சந்தேக நபர்களுக்கு டிசம்பர் 24 வரை விளக்கமறியல்!

சீப்புக்குளம் பகுதியில் காட்டு யானையொன்றைச் சித்திரவதை செய்து, அதன் உடலில் தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய...

1743195570
செய்திகள்உலகம்

சிட்னி துப்பாக்கிச் சூடு: வெறுப்புப் பேச்சைத் தடுக்க அவுஸ்திரேலியாவின் புதிய சட்டங்கள் மற்றும் கடும் எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் யூத சமூகத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து,...

1739447780 5783
இந்தியாசெய்திகள்

இந்திய விமானங்களுக்கான வான்வெளித் தடையை ஜனவரி வரை நீடித்தது பாகிஸ்தான்!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதாக...

25 6939a0f597196 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளியின் தாக்கம்: 200 கடல் மைல் கடற்கரை மாசு – கடற்றொழிலுக்குப் பாரிய அச்சுறுத்தல்!

சமீபத்தில் நிலவிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் இலங்கையின் சுமார் 200 கடல் மைல்...