ஜனாதிபதி தேர்தலை குறிவைக்கும் ரணில்
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி தேர்தலை குறிவைக்கும் ரணில்

Share

ஜனாதிபதி தேர்தலை குறிவைக்கும் ரணில்

அடுத்த வருட ஆரம்பத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திட்டமிட்டுள்ளார் என தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் நேற்றையதினம்(25.07.2023) இடம்பெற்ற விசேட சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் ஜனாதிபதி தேர்தலைத் தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கும் மூன்றாவதாக மாகாண சபைத்தேர்தலை நடத்துவதற்கும் ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.

ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் நேற்று மாலை 6 மணிமுதல் 45 நிமிடங்கள் இடம்பெற்ற இந்த விசேட சந்திப்பில் பல தரப்பட்ட விடயங்களும் பேசப்பட்ட நிலையில், தனது தேர்தல் திட்டம் குறித்தும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விக்னேஸ்வரனிடம் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய அடுத்த ஆண்டு ஜனவரியில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்குத் தான் ரணில் திட்டமிடுகின்றார் என்பதையும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 150
உலகம்செய்திகள்

சர்வதேச அரசியலில் சலசலப்பு: துருக்கி மற்றும் இஸ்ரேல் குறித்து உகாண்டா ராணுவத் தளபதி அதிரடி கருத்து!

உகாண்டா ராணுவத் தளபதியும், அந்த நாட்டு அதிபர் யோவேரி முசேவேனியின் மகனுமான முஹூசி கைனெருகபா (Muhoozi...

world 149
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பு புதையல் வேட்டை விவகாரம்: அரச அதிகாரி உள்ளிட்ட 9 பேரின் விளக்கமறியல் நீடிப்பு!

மட்டக்களப்பு, மண்முனைப் பகுதியில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்திற்கு அருகில், சட்டவிரோதமாகப்...

world 146
உலகம்செய்திகள்

இயேசு கிறிஸ்துவாகத் தன்னைச் சித்தரித்த டொனால்ட் டிரம்ப்: அமெரிக்காவில் வெடித்தது புதிய சர்ச்சை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தன்னை இயேசு கிறிஸ்துவுக்கு நிகராகச் சித்தரிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு...

world 145
செய்திகள்இலங்கைபிராந்தியம்

 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை: பொதுமக்களுக்கு NBRO அவசர அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவும் கடும் மழைப்பொழிவு காரணமாக, நான்கு மாவட்டங்களுக்கு முதலாம் கட்ட (Level-1) மண்சரிவு அபாய...