24 6700b16d026b7
இலங்கைசெய்திகள்

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள புலமை பரிசில் பரீட்சை: எடுக்கப்பட்டுள்ள மற்றுமொரு நடவடிக்கை

Share

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள புலமை பரிசில் பரீட்சை: எடுக்கப்பட்டுள்ள மற்றுமொரு நடவடிக்கை

2024ஆம் கல்வியாண்டிற்கான புலமைப் பரிசில் பரீட்சையில் முன்கூட்டியே வினாக்கள் வெளியான விவகாரம் தொடர்பில் ஆராய கல்வி அமைச்சினால் மற்றுமொரு குழு நியமிக்கப்பட்டுள்ளது.

கல்வியமைச்சர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் ஆலோசனையின் பேரில் கல்வியமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தரவினால் நியமிக்கப்பட்டுள்ள இந்தக் குழுவில் ஜனாதிபதி அலுவலகம் மற்றும் பரீட்சை திணைக்கள அதிகாரிகள் இருவர், பேராசிரியர்கள் இருவர் அடங்கிய குழுவொன்று இடம்பெற்றுள்ளது.

புலமைப்பரிசில் பரீட்சையின் மதிப்பீட்டை இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்துவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எடுத்த தீர்மானத்திற்கமைய, இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவின் ஆய்வு அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பரீட்சைக்கு முன்னர் மூன்று கேள்விகள் மாத்திரமே வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், எட்டு வினாக்கள் வெளியிடப்பட்டுள்ளதாக அண்மையில் ஜனாதிபதியை சந்தித்த பெற்றோர் குழு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்ட இந்த குழு வெளியான வினாக்களின் எண்ணிக்கை தொடர்பில் விரிவாக ஆராய உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...