இலங்கைசெய்திகள்

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள புலமை பரிசில் பரீட்சை: எடுக்கப்பட்டுள்ள மற்றுமொரு நடவடிக்கை

Share
24 6700b16d026b7
Share

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள புலமை பரிசில் பரீட்சை: எடுக்கப்பட்டுள்ள மற்றுமொரு நடவடிக்கை

2024ஆம் கல்வியாண்டிற்கான புலமைப் பரிசில் பரீட்சையில் முன்கூட்டியே வினாக்கள் வெளியான விவகாரம் தொடர்பில் ஆராய கல்வி அமைச்சினால் மற்றுமொரு குழு நியமிக்கப்பட்டுள்ளது.

கல்வியமைச்சர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் ஆலோசனையின் பேரில் கல்வியமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தரவினால் நியமிக்கப்பட்டுள்ள இந்தக் குழுவில் ஜனாதிபதி அலுவலகம் மற்றும் பரீட்சை திணைக்கள அதிகாரிகள் இருவர், பேராசிரியர்கள் இருவர் அடங்கிய குழுவொன்று இடம்பெற்றுள்ளது.

புலமைப்பரிசில் பரீட்சையின் மதிப்பீட்டை இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்துவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எடுத்த தீர்மானத்திற்கமைய, இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவின் ஆய்வு அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பரீட்சைக்கு முன்னர் மூன்று கேள்விகள் மாத்திரமே வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், எட்டு வினாக்கள் வெளியிடப்பட்டுள்ளதாக அண்மையில் ஜனாதிபதியை சந்தித்த பெற்றோர் குழு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்ட இந்த குழு வெளியான வினாக்களின் எண்ணிக்கை தொடர்பில் விரிவாக ஆராய உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share
Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...