tamilnaadi 6 scaled
இலங்கைசெய்திகள்

பொலிஸாரின் சுற்றிவளைப்பில் 1500 இற்கும் அதிகமானோர் கைது

Share

பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பில் 1500 இற்கும் அதிகமான சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தகவல் வழங்கியுள்ளது.

குறித்த சந்தேகநபர்கள் விசேட போதைப்பொருள் நடவடிக்கையின் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

590 கிராம் ஹெரோயின், 01 கிலோ 300 கிராம் ஐஸ், 06 கிலோ 330 கிராம் கஞ்சா மற்றும் ஏனைய போதை மாத்திரைகள் அங்கு காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று நண்பகல் 12.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேர சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்ட 1554 சந்தேக நபர்களில் 82 பேர் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள உத்தரவுக்கு அமைய மேலதிக விசாரணைகள் நடத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், இரண்டு சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், போதைக்கு அடிமையான அறுபத்திரண்டு பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
image 3e3e6e2855
செய்திகள்இலங்கைபிராந்தியம்

50 அடி பள்ளத்தின் விளிம்பில் நின்ற பேருந்து: 40 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய சாரதியின் சமயோசித புத்தி!

வலப்பனை இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்று இன்று (01) பாரிய விபத்துக்குள்ளாகவிருந்த நிலையில்,...

90
செய்திகள்இலங்கைபிராந்தியம்

305 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டுச் சிகரெட்டுகள் எரிப்பு: இலங்கைச் சுங்கம் கடும் எச்சரிக்கை!

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்குச் சிகரெட்டுகளைக் கொண்டு வருவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், சட்டவிரோதமாகக் கடத்தப்பட்ட...

1746078431 Bus fare 6
செய்திகள்இலங்கை

எரிபொருள் விலை குறைந்தாலும் பேருந்து கட்டணம் உயருமா? – போக்குவரத்து நெரிசலைக் காரணம்காட்டும் கெமுனு விஜேரத்ன!

எரிபொருள் விலை அண்மையில் குறைக்கப்பட்ட போதிலும், போக்குவரத்து நெரிசல் காரணமாக ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்ட பேருந்து...

Screenshot 20251211 014558 Facebook
செய்திகள்இலங்கை

முதியவர்களுக்கு உதவுவது போல் நடித்து வங்கி அட்டைத் திருட்டு: பொலன்னறுவை நபர் களுத்துறையில் கைது!

வங்கி ஏடிஎம் (ATM) இயந்திரங்களில் பணம் எடுக்க வரும் முதியவர்களுக்கு உதவுவது போல் நடித்து, அவர்களின்...