Rasi palan30h scaled
இலங்கைசெய்திகள்

கவனமாக இருக்குமாறு புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை

Share

வெளிநாட்டு வேலை வாய்ப்பினை பெற்றுத்தருவதாக தெரிவித்து இளைஞர்,யுவதிகளை ஏமாற்றும் மோசடி கும்பல் குறித்து கவனமாக இருக்குமாறு புலனாய்வு அமைப்புகள் எச்சரித்துள்ளன.

கம்போடியா, மியன்மார், தாய்லாந்து மற்றும் லாவோஸ் ஆகிய நாடுகளில் பல பாதாள உலகக்கும்பல் இயங்கி வருவதாகவும், கணினி குற்றங்களுக்கு அவர்களைப் பயன்படுத்தி ஏராளமான இளைஞர்களை சிறையில் அடைத்து பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளாக்கி வருவதாகவும் அந்நாட்டு புலனாய்வு அமைப்புகள் கண்டுபிடித்துள்ளன.

இதன்படி, இந்த 04 நாடுகளில் பாதாள உலகக்கும்பல்களின் கட்டுப்பாட்டில் உள்ள முகாம்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கை இளைஞர்கள் பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளாகி அவர்களின் உழைப்பு பலவந்தமாக சுரண்டப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

‘மியாவெட்டி’ என்ற பகுதியில் இவர்கள் வலுக்கட்டாயமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மியன்மாருக்கும் தாய்லாந்திற்கும் இடையில் பாயும் நதியின் ஊடாக ‘மியாவெட்டி’ என்றழைக்கப்படும் மாகாணம் விவசாய நிலம் என்றும், அண்மைக்கால சீன முதலீட்டால் இது குற்றச்செயல்கள் நிறைந்த பகுதியாக மாறியுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த முகாம்கள் சீன பிரஜைகள் தலைமையிலான பாகிஸ்தானியர்கள், பங்களாதேஷ் மற்றும் இலங்கையர்களைக் கொண்ட ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்களால் கட்டுப்படுத்தப்படுவதாகவும், அவர்கள் சுமார் 5 ஆண்டுகளாக இந்த கணினி குற்றங்களைச் செய்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், மியன்மார் எல்லையில் பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கியுள்ள இலங்கையர்கள் குழுவொன்று இலங்கைக்கு கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளது.

இவர்களை மீட்பதற்கு 15 கோடி ரூபா பணம் தேவைப்படுவதாகவும், அந்த தொகையை வழங்க இலங்கையின் முன்னணி வர்த்தகர்கள் உட்பட பல தரப்பினரின் ஆதரவை எதிர்பார்த்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
images 6 2
செய்திகள்இலங்கை

வாகன இறக்குமதி நிலையான மட்டத்தை அடைந்தது; டொலர் கையிருப்பு உயரும்: மத்திய வங்கி ஆளுநர் நம்பிக்கை!

இலங்கையில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வாகன இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவில் நிலையான மட்டத்தை அடைந்துள்ளதாக,...

MediaFile 21
செய்திகள்இலங்கை

யாழ்ப்பாணம் நாவாந்துறையில் 290 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 5 சந்தேகநபர்கள் கைது!

யாழ்ப்பாணம் – நாவாந்துறைப் பகுதியில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, ஐஸ் (Ice) போதைப்பொருளுடன் 5 சந்தேகநபர்கள்...

6.WhatsApp Image 2024 11 20 at 09.04.56
இலங்கைஅரசியல்செய்திகள்

மீனவர்களைப் பாதுகாப்போம், கடற்றொழில் துறையை நவீனமயமாக்குவோம்: அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உறுதி!

இலங்கை மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருவதாகவும், அவர்களை நிச்சயம் பாதுகாப்பதாகவும் கடற்றொழில், நீரியல் மற்றும்...