tamilnaadif 4 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பாடசாலை கல்வி திட்டத்தில் வரப்போகும் மாற்றம்

Share

இலங்கையில் பாடசாலைகளில் தரம் 6 முதல் ஆங்கிலத்தை கட்டாயமாக்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாக கல்விக்கான துறைசார் கண்காணிப்புக் குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் வி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கல்விச் சீர்திருத்தங்களின் பிரகாரம் அனைத்துப் பாடசாலைகளையும் மாகாண சபைகளின் கீழ் இயங்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

அதன்படி, தேசிய மற்றும் மாகாண பாடசாலைகள் என இருவகையான பாடசாலைகள் இனி பேணப்படாமல், கல்வி அமைச்சினால் மேற்கொள்ளப்படும் பாடசாலைகளின் மேற்பார்வை மற்றும் நிர்வாகம் மாகாண சபைகளுக்கு மாற்றப்படும் வகையில் சீர்திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.

மாகாணசபையிலிருந்து மாகாணசபைக்கு மாறாத நிர்வாக முறைமையின் கீழ் அனைத்துப் பாடசாலைகளும் நடத்தப்பட வேண்டும் என குழு தீர்மானித்துள்ளது.

பணம் உள்ளிட்ட சகல வசதிகளையும் செய்து கொடுக்கும்போது அநீதி இழைக்க வேண்டாம் என தெரிவிக்கப்பட்டது.

ஆரம்ப தரம், 6 முதல் 9ம் தரம் மற்றும் உயர்தரம் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் பாடசாலைகளை நடத்துவதற்கும், நான்கு வருடங்களுக்கு ஒருமுறை இத்திட்டத்தை மேம்படுத்துவதற்கும் முன்மொழியப்பட்டுள்ளது.

அத்துடன், உயர்தரம் 12ஆம் தரத்துக்கும், சாதாரண தரம் 10ம் தரத்துக்கும் கொண்டு வரப்பட்டு, ஒரு பிரதான பாடசாலையைச் சுற்றி அமைந்துள்ள 08 பாடசாலைகள் போஷிக்கப்பட்டு பராமரிக்கப்படும்.

இதற்கு மேலதிகமாக, தரம் 6 முதல் ஆங்கிலத்தை கட்டாயமாக்குவதற்கும் முன்மொழியப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 680b5efd70985
செய்திகள்அரசியல்இலங்கை

உகண்டா பணத்தை மீட்க ஒத்துழைக்கத் தயார் – அரசாங்கத்திற்கு நாமல் ராஜபக்ச சவால்!

ராஜபக்சக்களால் உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிதியை அநுர அரசாங்கம் ஏன் இன்னும் மீட்கவில்லை என ஸ்ரீலங்கா...

vikatan 2025 12 25 jj677mzq ajitha 66
செய்திகள்இந்தியா

தவெக மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்காததால் விரக்தி: தூக்க மாத்திரை உட்கொண்டு பெண் நிர்வாகி தற்கொலை முயற்சி!

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்படாததால்...

Kajenthirakumar Ponnambalam
செய்திகள்அரசியல்இலங்கை

பலாலி ஓடுதளத்தை விரிவாக்குவது அவசியம் – இந்திய அமைச்சர் ஜெய்சங்கரிடம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தல்!

யாழ்ப்பாணம் – பலாலி விமான நிலையத்தின் ஓடுதளத்தை விரிவுபடுத்தி, அதனை முழுமையான சர்வதேச தரத்திற்கு உயர்த்துவது...

25 694d11c3cbd81
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கண்டி – ஹசலகவில் கோரத் தாண்டவமாடிய நிலச்சரிவு: 5 கிராமங்கள் வசிக்கத் தகுதியற்றவை என அறிவிப்பு!

டித்வா புயலால் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவுகளைத் தொடர்ந்து கண்டி மாவட்டத்தில் ஹசலக நகரை ஒட்டிய பமுனுபுர...