tamilnif 16 scaled
இலங்கைசெய்திகள்

காதலியை பார்க்க சென்ற பொலிஸ் அதிகாரிக்கு நேர்ந்த கதி

Share

காதலியை பார்க்க சென்ற பொலிஸ் அதிகாரிக்கு நேர்ந்த கதி

குருநாகல் பிரதேசத்தில் காதலியை சந்திக்க வந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார்.

அவரை தாக்கியதாக கூறப்படும் இருவரை கைது செய்வதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக ரஸ்நாயக்கபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நேற்று முன்தினம் மாலை 6.00 மணியளவில் ரஸ்நாயக்கபுர – விகாரை வீதி பகுதியில் வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வாழைச்சேனை பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.

கந்தளை, சேருநுவர பிரதேசத்தில் வசிக்கும் இந்த பொலிஸ் உத்தியோகத்தர், ரஸ்நாயக்கபுர, கோவில் வீதியில் வசிக்கும் தனது காதலியை சந்திப்பதற்காக நேற்று முன்தினம் தனது காதலியின் வீட்டிற்கு வந்துள்ளார்.

பொலிஸ் உத்தியோகத்தர் வந்த போது இடம்பெற்றதாகக் கூறப்படும் வாக்குவாதத்தை அடுத்து இரண்டு நபர்களால் அவர் தடியினால் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலின் பின்னர், பொலிஸ் உத்தியோகத்தர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
07 8
உலகம்செய்திகள்

ஈரான் போருக்கு பிரிட்டனின் உதவி தேவையில்லை: பிரதமர் கீர் ஸ்டார்மரை விமர்சித்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்

மத்திய கிழக்கில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் போரில், பிரிட்டனின் ஆதரவு...

06 7
உலகம்செய்திகள்

இஸ்ரேலுக்கு அவசரக்கால ஆயுத விற்பனை: அமெரிக்க காங்கிரஸ் அனுமதியைத் தவிர்த்த ட்ரம்ப் நிர்வாகம்

ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் படைகளுக்கு இடையே நடைபெற்று வரும் போர் தீவிரமடைந்துள்ள சூழலில், இஸ்ரேலுக்கு சுமார்...

05 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாத்தறை சிறைச்சாலையில் கைதிகள் இடமாற்றம்: பதற்றமான சூழலால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது!

மாத்தறை சிறைச்சாலையிலிருந்து ஒன்பது கைதிகள் அங்கிருந்த அங்கிருந்து அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, மாத்தறை சிறைச்சாலையினுள்...

04 7
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கிளங்கன் வைத்தியசாலை துஷ்பிரயோகச் சம்பவம்: இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் போராட்டத்திற்கு தடை!

டிக்கோயா கிளங்கன் மாவட்ட ஆதார வைத்தியசாலையில் உயிரிழந்த இளம் பெண்ணின் உடல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் கூறப்படும்...