tamilnif 16 scaled
இலங்கைசெய்திகள்

காதலியை பார்க்க சென்ற பொலிஸ் அதிகாரிக்கு நேர்ந்த கதி

Share

காதலியை பார்க்க சென்ற பொலிஸ் அதிகாரிக்கு நேர்ந்த கதி

குருநாகல் பிரதேசத்தில் காதலியை சந்திக்க வந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார்.

அவரை தாக்கியதாக கூறப்படும் இருவரை கைது செய்வதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக ரஸ்நாயக்கபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நேற்று முன்தினம் மாலை 6.00 மணியளவில் ரஸ்நாயக்கபுர – விகாரை வீதி பகுதியில் வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வாழைச்சேனை பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.

கந்தளை, சேருநுவர பிரதேசத்தில் வசிக்கும் இந்த பொலிஸ் உத்தியோகத்தர், ரஸ்நாயக்கபுர, கோவில் வீதியில் வசிக்கும் தனது காதலியை சந்திப்பதற்காக நேற்று முன்தினம் தனது காதலியின் வீட்டிற்கு வந்துள்ளார்.

பொலிஸ் உத்தியோகத்தர் வந்த போது இடம்பெற்றதாகக் கூறப்படும் வாக்குவாதத்தை அடுத்து இரண்டு நபர்களால் அவர் தடியினால் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலின் பின்னர், பொலிஸ் உத்தியோகத்தர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
30 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரியாத் மற்றும் டுபாய்க்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி...

29 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயார்: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு...

23 4
செய்திகள்இலங்கை

தமிழக சட்டமன்ற தேர்தல்: தவெக-அதிமுக கூட்டணி குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின்...

22 7
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மனு: விசாரணை வரும் 13-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது...