tamilni 422 scaled
இலங்கைசெய்திகள்

இளம் தாய் ஒருவரின் கொடூர செயல்

Share

இளம் தாய் ஒருவரின் கொடூர செயல்

அனுராதபுரம், தம்புத்தேகம தேக்கவத்தை பகுதியில் சிசுவை புதைத்த பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கணவரை பிரிந்து பிள்ளைகளுடன் தனியாக வசித்து வந்த இவர், காலதிவுல்வெவ பிரதேசத்தை சேர்ந்த 44 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

குழந்தை உருவாகி 6 மாதமாக இருக்கும் போது கருவை கலைப்பதற்காக சில மாத்திரைகளை உட்கொண்டதாகவும் சந்தேகநபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

அந்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, ​​சிசு புதைக்கப்பட்ட இடத்தை தம்புத்தேகம பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சந்தேகநபரான பெண்ணும் அவரது முறைகேடான கணவரும் கைது செய்யப்பட்டு தம்புத்தேகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

சந்தேக நபர்களை ஜனவரி 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...