tamilnih 2 scaled
இலங்கைசெய்திகள்

2600 கோடி ரூபாவை வருமானமாக பெற்ற கட்டுநாயக்க விமான நிலையம்

Share

2600 கோடி ரூபாவை வருமானமாக பெற்ற கட்டுநாயக்க விமான நிலையம்

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் இந்தாண்டில் 2600 கோடி ரூபாய் வருமானத்தை பதிவு செய்துள்ளது.

கோவிட் தொற்றுநோய்களின் போது, ​​விமான நிலையம் 400 கோடி ரூபா நட்டத்தை சந்தித்தது. எனினும் இந்தாண்டில் இலாபத்தை பதிவு செய்ய முடிந்தது.

மேலும் விமான நிலையம் தென்கிழக்கு ஆசியாவில் மிகவும் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட விமான நிலையமாக மாறியுள்ளதாக, துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவத்துள்ளார்.

விமான நிலைய வளாகத்தில் நவீன தகவல் தொடர்பு சாதனங்கள் மற்றும் ரேடார் பொருத்துதல் உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

விமான நிலையத்திற்கு சொந்தமான பணத்தில் அதற்கான பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அதற்கேற்ப விமான நிலையத்தின் பாதுகாப்பை போன்று எமது வான் வலயத்தின் பாதுகாப்பையும் உருவாக்க முடிந்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு அதிகளவான ரஷ்ய சுற்றுலா பயணிகள் வருகை தருவதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், விமான நிலையத்தின் நஷ்டம் ஓரளவுக்கு குறைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
world 161
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விபத்துகளால் 713 பேர் பலி: வாகன ஓட்டுநர்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

தற்போது நிலவி வரும் பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துவதையும், கவனக்குறைவாகச் செயல்படுவதையும் தவிர்க்குமாறு இலங்கை...

world 160
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நிகழ்ந்த விபத்துக்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள்: பொலிஸாரின் அதிரடி சோதனைகள்!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மணிநேரங்களில் இடம்பெற்ற விபத்துக்கள் மற்றும் பொலிஸ் சோதனைகளில் பலர்...

world 159
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பட்டாசு வெடிக்கும் போது அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்!

சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது எதிர்பாராத விதமாக இடம்பெறும் பட்டாசு விபத்துகளைத் தடுப்பது குறித்து சுகாதார...

world 158
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கல்கிசையில் மோதல்: இலங்கை பெண்ணைத் தாக்கிய உக்ரைன் பெண் விளக்கமறியலில்!

கல்கிசையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு முன்பாக கடந்த 12ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம்...