tamilni 362 scaled
இலங்கைசெய்திகள்

வைத்தியசாலையிலிருந்து தப்பியோடிய கைதி

Share

வைத்தியசாலையிலிருந்து தப்பியோடிய கைதி

எம்பிலிபிட்டி சிறைச்சாலை கைதி ஒருவர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிறைச்சாலை அதிகாரிகளிடமிருந்து தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று (20.12.2023) இடம்பெற்றுள்ளது.

தப்பியோடிய சிறைக்கைதி எம்பிலிப்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடைய நபரென கூறப்படுகிறது.

இவர் 250 மில்லிகிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருளுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் 10,000 ரூபா அபராதம் செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அபராதத் தொகையை செலுத்த முடியாததால் இவரை எம்பிலிப்பிட்டி சிறைச்சாலையில் எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறையியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் இவர் சுகயீனம் காரணமாக எம்பிலிபிட்டிய பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதே சிறைச்சாலை அதிகாரிகளிடமிருந்து தப்பிச்சென்றுள்ளார்.

மேலும், தப்பிச் சென்ற கைதியை தேடும் பணியில் சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் எம்பிலிபிட்டி பொலிஸார் தீவிரமாக செயற்பட்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
image 2025 12 02 093823108
இலங்கைசெய்திகள்

முல்லைத்தீவு கடற்படை வீரர்கள் விபத்து: காணாமல் போன 5 பேரில் ஒருவரின் உடலம் மீட்பு!

அதிதீவிர வானிலைக் காரணமாக முல்லைத்தீவு சாலை முகத்துவாரப் பகுதியில், மணலை அகற்றி விரிவுபடுத்தும் பணியின்போது, கடந்த...

IMG 4676
இலங்கைசெய்திகள்

லுணுவில ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த விமானிக்கு விடை: பட்டச் சான்றிதழ் பூதவுடலுக்கு சமர்ப்பிப்பு!

அண்மையில் லுணுவில பகுதியில் நிவாரணப் பணிக்காகச் சென்றபோது விபத்துக்குள்ளாகி உயிரிழந்த இலங்கை விமானப்படையின் விங் கமாண்டர்...

25 68663a41415fd
இலங்கைசெய்திகள்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் பேரிடர் நிர்வாகத்தை அரசாங்கம் ஆய்வு செய்ய வேண்டும்: நாமல் ராஜபக்ச!

பேரிடர் சூழ்நிலையை நிர்வகிக்க அரசாங்க இயந்திரம் இன்னும் தயாராக இல்லை என்று சுட்டிக்காட்டிய சிறிலங்கா பொதுஜன...

MediaFile 4
இலங்கைசெய்திகள்

வட்டியில்லா மாணவர் கடன்: விண்ணப்பக் காலக்கெடு டிசம்பர் 15 வரை நீடிப்பு!

வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் 10வது கட்டத்திற்கான விண்ணப்பக் காலக்கெடு 2025.12.15 ஆம் திகதி வரை...