tamilni 285 scaled
இலங்கைசெய்திகள்

யூதர்களைப்போன்ற வளர்ச்சியை இலங்கை பெறவேண்டும்

Share

யூதர்களைப்போன்ற வளர்ச்சியை இலங்கை பெறவேண்டும்

யூதர்களைப்போன்று கல்வியிலும் பொருளாதாரத்திலும் வளரும்போது இலங்கையினையே நாங்கள் ஆட்சிசெய்யமுடியும் என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்

மட்டக்களப்பு தன்னாமுனை புனித ஜோசப் கல்லூரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டபோதே இதனை கூறியுள்ளார்.

உலகளவில் சிறு பிரிவினராகயிருந்து உலகத்தினையே ஆட்டிப்படைக்கும் நிலைமையினை யூதர்கள் கொண்டதற்கு காரணம் அவர்களின் பொருளாதாரமும் கல்வியும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந் நிகழ்வில் அதிதியாக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் கலந்து கொண்டு வர்த்தக பிரிவு வகுப்பறைனை திறந்துவைத்தார்.

மேலும் பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நிகழ்வுகள் இடம்பெற்றன. மக்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில் வரவேற்பு நடனம என்பனவும் இடம்பெற்றது.

இதன்போது அன்மையில் வெளியான தரம் 5 புலமைப்பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களும் அதிதிகளினால் கௌரவிக்கப்பட்டனர்.

அத்துடன் ஏறாவூர் கல்வி கோட்டத்தில் வறிய நிலையில் உள்ள மாணவர்களுக்கான புத்தக பைகள் மற்றும் பாதணிகளும் வழங்கிவைக்கப்பட்டன.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...