tamilni 298 scaled
இலங்கைசெய்திகள்

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு முக்கிய அறிவிப்பு

Share

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு முக்கிய அறிவிப்பு

விவசாயத்துறைக்குள் இளைஞர்களை ஈர்க்கும் நோக்கில், ஆயிரம் இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு தலா பத்து இலட்சம் ரூபாய் வழங்கி, ஏற்றுமதி சார்ந்த பயிர்களுக்கு வழிகாட்ட விவசாய அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

இதற்கமைய, விவசாய அபிவிருத்தி திணைக்களத்தினால் 2024 ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 3000 மில்லியன் ரூபாவில் 1000 மில்லியன் ரூபாவை இதற்காக பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இது குறித்து பணிப்புரை விடுத்துள்ளார்.

அதன்படி, நெல், சோளம், மிளகாய், உருளைக்கிழங்கு ஆகிய நான்கு பயிர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படவுள்ளது.

அந்த பயிர்களுக்கு மேலதிகமாக, தற்போது சர்வதேச அளவில் தேவையுள்ள பயிர்களை பயிரிட ஊக்குவிப்பதற்காக நடவடிக்கை எடுக்குமாறு விவசாய அபிவிருத்தி திணைக்களத்திற்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அரச சுபநேரக் குழுவின்மையால் சர்ச்சை: ‘சர்வஜன அதிகாரம்’ வெளியிட்ட புத்தாண்டு சுபநேரப் பத்திரம்!

2024 ஆம் ஆண்டில் கலாசார திணைக்களத்தால் அரச சுபநேரக் குழு கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அரசாங்கம் இதுவரையில்...

24 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் சுகாதார சேவையை வலுப்படுத்த புதிய முயற்சி: 2,918 செவிலியர் மாணவர்கள் இணைப்பு!

இலங்கையின் சுகாதாரத் துறையை மேம்படுத்தும் நோக்கில், புதிய மாணவ செவிலியர் பயிற்சிக்காக 2,918 பேரை இணைத்துக்கொள்ளும்...

23 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கில் அமைதியை வலியுறுத்தும் ஹமாஸ்: ஈரானிடம் விடுத்த கோரிக்கை!

மத்திய கிழக்கில் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே போர் தீவிரமடைந்து வரும்...

22 11
செய்திகள்உலகம்

புதிய தலைவர் மொஜ்தபா காமெனிக்கு அச்சுறுத்தல் விடுத்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் – ஈரான் எச்சரிக்கை!

ஈரானின் புதிய உயர்மட்டத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா காமெனியை (Mojtaba Khamenei) இலக்கு வைத்து அமெரிக்காவோ...