rtjy 104 scaled
இலங்கைசெய்திகள்

வீடொன்றிற்குள் அத்துமீறி நுழைந்து வாள்வெட்டு தாக்குதல்

Share

வீடொன்றிற்குள் அத்துமீறி நுழைந்து வாள்வெட்டு தாக்குதல்

பலபோவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபரை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அத்தனகல்ல நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 7ஆம் திகதி பலபோவ பிரதேசத்தில் வீடொன்றிற்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த நபரொருவரை வாளால் தாக்கி பலத்த காயப்படுத்தி குறித்த சந்தேகநபர் தலைமறைவாகியிருந்தார்.

இந்நிலையில், சந்தேக நபரை வெயாங்கொடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியிருந்தனர்.

நீண்ட நாள் தகராறு ஒன்றின் அடிப்படையிலேயே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் குறித்த வழக்கை பரிசீலனை செய்த அத்தனகல்ல நீதிமன்ற நீதவான் சந்தேகநபரை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...