tamilni 224 scaled
இலங்கைசெய்திகள்

விமல் வீரவன்சவுக்கு நீதிமன்றம் உத்தரவு

Share

விமல் வீரவன்சவுக்கு நீதிமன்றம் உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவை இன்று உடனடியாக நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க உத்தரவிட்டுள்ளார்.

விமல் வீரவன்சவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட வழக்கு தொடர்பாக பிரதிவாதி சமர்ப்பித்த ஆரம்ப ஆட்சேபனை மீதான உத்தரவுக்கு அமையவே நேற்று (12.12.2023) இந்த உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது

பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சவேந்திர பெர்னாண்டோ, தமது கட்சிக்காரர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றில் அறிவித்தார்.

இதன்படி விமல் வீரவன்சவின் பிணைமுறிகள் நீதிமன்றில் முன்னிலையாகி உண்மைகளை உறுதிப்படுத்தத் தவறியமை தொடர்பில் அவதானம் செலுத்திய நீதிபதி, மேற்படி மனுவை பிறப்பித்ததுடன், அவரது உடல் நிலை குறித்த மருத்துவ அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், 2010ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை 5 வருடங்கள் அமைச்சராக இருந்த அவர் சொத்துக்கள் மற்றும் சம்பளத்தின் மூலம் சம்பாதிக்க முடியாத 75 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணம் மற்றும் சொத்துக்களை வைத்திருந்தமை தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
world 60
செய்திகள்அரசியல்இலங்கை

செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தை கொள்கை மற்றும் அறநெறிகளுடன் வடிவமைக்க வேண்டும்: பிரதமர் ஹரினி அமரசூரிய வலியுறுத்தல்

இலங்கை வெறுமனே செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திற்குத் தன்னைத் தகவமைத்துக் கொள்வதை விடுத்து, வலுவான கொள்கை,...

world 59
செய்திகள்உலகம்

டெனரிஃப் தீவை வந்தடையும் சொகுசுக் கப்பலில் ஹன்டா வைரஸ் பரவல்: ஐரோப்பிய நாடுகள் அவசர வெளியேற்ற நடவடிக்கை

‘எம்வி ஹோண்டியஸ்’ (MV Hondius) என்ற சொகுசுக் கப்பலில் பரவி வரும் கொடிய ஹன்டா வைரஸ்...

world 58
செய்திகள்இந்தியா

தமிழக முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு: மாநில நிதிநிலை குறித்து விரைவில் ‘வெள்ளை அறிக்கை’ வெளியீடு

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக இன்று (மே 10) பதவியேற்றுக்கொண்ட சி. ஜோசப் விஜய், தனது முதல்...

world 57
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின் கட்டண உயர்வு: தரமற்ற நிலக்கரி இறக்குமதி சுமையை மக்கள் மீது சுமத்த வேண்டாம் என சஜித் பிரேமதாச வலியுறுத்தல்

அரசாங்கத்தினால் அண்மையில் அறிவிக்கப்பட்ட மின்சாரக் கட்டண உயர்வு, தரமற்ற நிலக்கரி இறக்குமதியினால் ஏற்பட்ட நட்டத்தை மின்...