tamilni 158 scaled
இலங்கைசெய்திகள்

உரிமைகளே இல்லாத நாட்டில் எதற்கு மனித உரிமை

Share

உரிமைகளே இல்லாத நாட்டில் எதற்கு மனித உரிமை

உரிமைகளே இல்லாத நாட்டில் எதற்கு மனித உரிமைகள் தினம் என வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு திருகோணமலை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய காரியாலயம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டமானது (10.12.20232) வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்பு குழு மற்றும் வலிந்து கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் ஆகியோரின் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது.

நீதியான சர்வதேச பொறிமுறை விசாரணை தேவை, உரிமைகளே இல்லாத நாட்டில் எதற்கு மனித உரிமைகள் தினம் எனவும் எமது உறவுகளை காணாமல் ஆக்கப்பட்டு பல வருடங்கள் கடந்தும் நீதி இல்லை எனவும் இதனால் எதற்கு இந்த மனித உரிமைகள் தினம் என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் உறவினர்கள் இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரித்துள்ளனர்.

அத்துடன் தனது மகனை விடுவிக்க கடற்படை அதிகாரி 15 இலட்சம் ரூபா கப்பம் கேட்டதுடன் இது தொடர்பான பற்று சீட்டினை கிழித்துவிட்டனர் என தாய் ஒருவர் இதன் போது கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

மேலும் மக்கள் தனது கருத்துகளை எழுதிய பல பதாகைகளை ஏந்தியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...