tamilni 155 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் தகவல்

Share

இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் தகவல்

2024 வரவு செலவுத்திட்டத்துடன் பல துணை ஆவணங்கள் வெளியிடப்பட்டதை தொடர்ந்து, சர்வதேச நாணய நிதிய திட்டத்தில், இலங்கையின் தற்போதைய வெளிப்படைத்தன்மை கடந்த நவம்பர் மாதம் மேம்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதியாக வெளியிடப்பட்ட வெரைட்டின் (Verite Research) ஆய்வில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் ‘தெரியாதது’ என வகைப்படுத்தப்பட்ட ஆறு அர்ப்பணிப்புக்களின் முன்னேற்றம் குறித்த தகவல்களை துணை ஆவணங்கள் வழங்கியுள்ளன.

இதில் ஐந்து வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 6 ஆவது பொறுப்பான வரி வருவாய் இலக்கு இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்று ஆய்வில் குறிப்பிட்டுள்ளது.

2024 நவம்பர் இறுதிக்குள் நிறைவேற்ற வேண்டிய 73 அர்ப்பணிப்புக்களில் 12 ‘நிறைவேற்றப்படவில்லை, 15 ‘தெரியாதவை’ மற்றும் 46 நிறைவேற்றப்பட்டுள்ளது என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இதன்படி அர்ப்பணிப்புக்களில் 63 சதவீதமானவை பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. எனினும் இந்த வகைப்படுத்தல், இலங்கையின் ஒட்டுமொத்த செயல்திறன் ஈர்க்கக்கூடியதை விட குறைவாகவே உள்ளது என்பதையே காட்டுவதாக ஆய்வில் தெரிவித்துள்ளது.

இதேவேளை சர்வதேச நாணய நிதிய திட்டத்தின் இரண்டாம் தவணையான சுமார் 330 மில்லியன் டொலர்களை வழங்குவது குறித்து சர்வதேச நாணய நிதியம் எதிர்வரும் 12ஆம் திகதி வாக்களிக்கவுள்ளது.

Share
தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...