tamilni 139 scaled
இலங்கைசெய்திகள்

ரஜமஹா விகாரையின் விகாராதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல்!\

Share

ரஜமஹா விகாரையின் விகாராதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல்!\

மிஹிந்தலை-ரஜமஹா விகாரையின் விகாராதிபதி தேரருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(09.12.2023) உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் கூறுகையில், இராணுவத்தில் இருப்பதாக கூறிக்கொண்ட இருவர் கடந்த 3 வாரங்களாக அந்த புனித ஸ்தலத்தில் இருந்த போது, சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிஸாரிடம் சிக்கியுள்ளனர்.

இதனால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக விகாராதிபதி தேரர் கருதுகின்றார்.

எனவே இது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி விசாரணை நடத்த வேண்டும்.

கட்சி பேதமின்றி விகாராதிபதியின் வாழ்க்கை தொடர்பான பொறுப்பு இருக்கின்றது, நாட்டில் நடக்கும் தவறுகளை கட்சி வேறுபாடின்றி அவர் விமர்சித்து வந்தாலும் அவற்றைத் தாங்கிக்கொள்வது நமது கடமை என்றும் கூறியுள்ளார்.

இதேவேளை மிஹிந்தலை புனித தலத்தின் பாதுகாப்பு மற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ள இராணுவம், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் எவருக்கும் இந்த அடையாளம் காணப்பட்ட நபர்கள் குறித்து தெரியாது.

நொச்சியாகம பிரதேசத்தில் உள்ள இராணுவ முகாம் ஒன்றின் கட்டளை தளபதியின் அறிவுறுத்தலின் பேரில் இந்த இருவரும் வந்துள்ளதாக பின்னர் தெரிய வந்துள்ளது என எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
images 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காட்டு யானையைச் சித்திரவதை செய்து தீ வைத்த சம்பவம்: சந்தேக நபர்களுக்கு டிசம்பர் 24 வரை விளக்கமறியல்!

சீப்புக்குளம் பகுதியில் காட்டு யானையொன்றைச் சித்திரவதை செய்து, அதன் உடலில் தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய...

1743195570
செய்திகள்உலகம்

சிட்னி துப்பாக்கிச் சூடு: வெறுப்புப் பேச்சைத் தடுக்க அவுஸ்திரேலியாவின் புதிய சட்டங்கள் மற்றும் கடும் எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் யூத சமூகத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து,...

1739447780 5783
இந்தியாசெய்திகள்

இந்திய விமானங்களுக்கான வான்வெளித் தடையை ஜனவரி வரை நீடித்தது பாகிஸ்தான்!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதாக...

25 6939a0f597196 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளியின் தாக்கம்: 200 கடல் மைல் கடற்கரை மாசு – கடற்றொழிலுக்குப் பாரிய அச்சுறுத்தல்!

சமீபத்தில் நிலவிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் இலங்கையின் சுமார் 200 கடல் மைல்...