இலங்கைசெய்திகள்

மோசடியான முறையில் டுபாய்க்கு சென்ற இலங்கையர்கள் நிர்க்கதி

tamilni 111 scaled
Share

மோசடியான முறையில் டுபாய்க்கு சென்ற இலங்கையர்கள் நிர்க்கதி

வாகன சாரதி தொழிலுக்கு தகுதியில்லாத சிலர், வாடகை சிற்றூந்து நிறுவனமொன்றில் சாரதிகளாக சேரும் வகையில் மோசடியான முறையில் டுபாய்க்கு சென்று நிர்க்கதியாகியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அங்கு வாகன சாரதி பரீட்சையில் சித்தியடைய முடியாமல் அவர்கள் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் அவர்களை இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

200 இலங்கையர்கள் இந்த மோசடி முறையின் கீழ் டுபாய் சென்றுள்ளனர் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

குழுவில் உள்ள சிலர் தேவையான திறன்கள் இல்லாமல் மோசடியாக அங்கு சென்றுள்ளனர். இன்னும் சிலர் சாரதி தேர்வில் தேவையான திறமைகளை பெற்றிருந்தும் டுபாயில் தோல்வியடைந்தனர்.

அதேநேரம் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களும் திரும்பி வர விரும்புகிறார்கள் என்று கூறிய அமைச்சர் அவர்களை திரும்ப அழைத்து வர திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

Share
Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...