இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தை ஒத்தி வைக்கும் ஜனாதிபதி

Share
tamilni 107 scaled
Share

நாடாளுமன்றத்தை ஒத்தி வைக்கும் ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தை ஒத்தி வைக்க திட்டமிட்டு உள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

எதிர்வரும் ஜனவரி மாத நடுப்பகுதி அளவில் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டால் நாடாளுமன்றின் செயற்குழுக்கள் அனைத்தும் இரத்தாகும் என்பதுடன் நாடாளுமன்றம் மீள ஜனாதிபதியினால் கூட்டப்பட்டதன் பின்னர் இந்த செயற்குழுக்கள் மீண்டும் புதிதாக செயற்படத் தொடங்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதியினால் நாடாளுமன்றை அதிகபட்சமாக 2 மாதங்களுக்கு ஒத்தி வைக்கப்படும் முடியும். ஜனாதிபதி நாடாளுமன்ற ஒத்திவைத்து மீளவும் நாடாளுமன்றம் அமர்வுகள் நடைபெறும் தினத்தை அறிவிக்க முடியும்.

மேலும் இந்த புதிய நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பம் ஆகும் போது ஜனாதிபதி அக்கிராசன உரையை மேற்கொண்டு சம்பிரதாயபூர்வமாக அமர்வுகளை ஆரம்பித்து வைப்பார்.

தற்பொழுது கோப் குழுவின் தலைவராக செயல்பட்டு வரும் பேராசிரியர் ரஞ்சித் பண்டாரவை அந்தப் பதவியில் இருந்து நீக்கும் நோக்கில் நாடாளுமன்றத்தை ஜனாதிபதி ஒத்தி வைப்பதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏனெனில் கோப் தலைவர் இலங்கை கிரிக்கெட் விவகாரத்தில் விசாரணை நடத்தி வருகின்றார்.

கிரிக்கெட் நிறுவனத்தின் திட்டமொன்றின் ஆலோசகராக பேராசிரியர் பண்டார கடமையாற்றி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

எனவே நிறுவனத்தின் சார்பில் பணியாற்றி வரும் ஒருவர் அந்த நிறுவனம் தொடர்பில் விசாரணை நடத்துவது பொருத்தமாகாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியிருந்தார்.

இதன் அடிப்படையில் ரஞ்சித் பண்டாரவை கோப் குழு தலைமைப் பதவியிலிருந்து நீக்கும் வகையில் ஜனாதிபதி நாடாளுமன்றத்தை ஒத்தி வைப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...